Skip to main content

மஹாஜனங்கள் யார்


மஹாஜனங்கள் யார்


வழங்கியவர் : சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


 ஸ்வயம்பூர்  நாரத: சம்பு:

 குமார: கபிலோ  மனு:

ப்ரஹ்லாதோ  ஜனகோ  பீஷ்மோ

 பலிர்   வையாசகீர் வயம்


 த்வாதஸயிதே   விஜானிமோ

 தர்மம் பகவதம் பத:

 குஹ்யம்  விசுத்தம்  துர்போதம் 

யம்  ஞாத்வாம்ருதம்   அஸ்னுதே


பிரம்ம தேவர், நாரதர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), சுயம்புவ மனு, பிரகலாத மகாராஜன், ஜனக மகாராஜன், பாட்டனார் பீஷ்மர், பலி மகாராஜன், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான சமயக் கோட்பாட்டை அறிந்தவர்களாவோம். அன்பிற்குரிய சேவகர்களே, பாகவத - தர்மம் அல்லது பரமபுருஷரிடம் அன்பு கொண்டு அவரிடம் சரணாகதியடைதல் எனப்படும் இந்த உன்னதமான சமயக் கோட்பாடு, ஜட இயற்கைக் குணங்களால் கறைப்படுத்தப்படாததாகும். இது மிகவும் இரகசியமானதும், சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை ஒருவன் புரிந்து கொண்டுவிட்டால், அவன் உடனே முக்தியடைந்து பரமபதத்திற்கு, பகவானின் இராஜியத்திற்குச் சென்று விடுகிறான். ( ஸ்ரீமத் பாகவதம் 6.3.20-21)



ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம்  பல கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  அவற்றில் முக்கியமாக 12 தனித்துவம் வாய்ந்த நபர்களின் வாழ்க்கை மற்றும் மகிமைகளை விவரிக்கும் தகவல்களும் உள்ளன.  அவர்கள் அனைவரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அதீத அன்பு கொண்டுள்ள மிகச் சிறந்த பக்தர்கள் ஆவர்.  அவர்கள் பகவானுக்கு  இடையறாது சேவை செய்து நாம் அவர்களை பின்பற்றும்படிக்கு  உதாரணமாக இருந்தார்கள். அவர்கள 12 பேர்  ஒன்றாக  மஹாஜனங்கள் என்று அழைக்கப்பட்டார்கள். 


அவர்களது வாழ்க்கை இப்பொழுதும் பேசப்படுகிறது என்றால் அது பகவான் மேல் அவர்கள் கொண்ட பக்தியினால் மட்டுமல்ல.  மாறாக பகவானும் அவர்கள் மேல் அதீத அன்பு கொண்டிருந்தார். அவர்களை தனது பல லீலைகளில்  பங்கேற்க வைத்தும் தனது விளையாட்டுத்தனமான திவ்ய செயல்களில் எல்லாம் அவர்களை ஈடுபட  வைத்தும் அவர் தனது அன்பை வெளிப்படுத்தினார்.  இந்த பக்தர்களின் வாழ்க்கை நமக்கு நல்ல பாடங்களை கற்றுத் தருகிறது.  பகவானால் எது நியமிக்கப்பட்டதோ அதையே அவர்கள் செய்தார்கள்.  சாஸ்திரங்களில் பரிந்துரை செய்யாத எதையும் செய்வதிலிருந்து அவர்கள் விலகியே இருந்தார்கள்.  அனைத்துத் துன்பங்களிலிருந்தும் பகவான் நம்மை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை முழுமையாகக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் தங்களை கதியற்றவர்களாக கருதிக் கொண்டு பகவானின் உதவியையே எப்போதும் நாடி அவரது திருவடித் தாமரையில் சரணடைந்து இருந்தார்கள்.  உண்மையான உணர்வுடன் தங்களின் வாழ்க்கையை முழுவதுமாக பகவத்தொண்டிற்காக அவர்கள் அர்ப்பணித்து இருந்தார்கள்.


12  மஹாஜனங்கள்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


1.  பிரம்மதேவர் 

2. நாரத மகரிஷி

3.  சிவபெருமான் 

4. நான்கு குமாரர்கள்

5.  கபிலதேவர்

6. மனு 

7. பிரகலாத் மஹராஜ் 

8. ஜனக மஹராஜ

9.  பீஷ்ம தேவர் 

10.  பலி மஹராஜ்

11.  சுகதேவ கோஸ்வாமி

12.  யமராஜர்




🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி

🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...