Skip to main content

தவத்தாலும், துறவினாலும் மனிதன் கடவுளாக முடியுமா ?

 


முழுமுதற் கடவுளாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மனித அல்லது மிருக உருவங்களை சில சமயங்களில் ஏற்கிறார். ஆனால் அவர்களின் இயல்புகளை அவர் ஒருபோதும் ஏற்பதேயில்லை. தவத்தினாலும், துறவினாலும் மனிதன் கடவுளாகலாம் என்ற தத்துவம் குறிப்பாக இந்தியாவில் இன்று அதிகரித்துள்ளது. பகவான் ஸ்ரீ ராமர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ஆகியோர் பகவான்களே என்று வேத நூல்களில் கூறப்பட்டுள்ளதை முனிவர்களும், ரிஷிகளும் அறிந்துள்ளனர். இதனால் யோக்கியமற்ற பல மனிதர்களும் தங்களது சொந்த அவதாரங்களை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு கடவுளின் ஓர் அவதாரத்தை உண்டுபண்ணும் இம்முறை, குறிப்பாக வங்காளத்தில் சாதாரண தொழிலாகியிருக்கிறது. பிரபலமான எந்தவொரு மனிதரும், யோக சக்திகளால் சில மாயாஜால வித்தைகளை செய்து காட்டும் போது, மக்கள் அவரை பரம புருஷரின் ஓர் அவதாரமாக எண்ணுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்வகையைச் சேர்ந்த ஓர் அவதாரமல்ல. அவர் உண்மையான பரம புருஷராக இருந்தார். அவர் தமது தாயார் முன் நான்கு கைகள் கொண்ட விஷ்ணுவாகத் தோன்றினார். பின்னர், தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்கி ஒரு மனிதக் குழந்தையாக மாறினார். அதன் பிறகு அவர் உடனே தமது தாயை துறந்து, கோகுலத்திலுள்ள மற்றொரு பக்தரை தேடிச் சென்றார். அங்கு நந்த மகாராஜரும், யசோதா மாதாவும் அவரை மகனாக ஏற்றுக்கொண்டனர். அதைப் போலவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்குச் சமமானவரான ஸ்ரீ பலதேவரும், ஸ்ரீ வசுதேவரின் மற்றொரு மனைவிக்குப் பிறந்த ஒரு மனிதக் குழந்தையாகவே கருதப்பட்டார். தமது பிறவி மற்றும் செயல்கள் ஆகியவையெல்லாம் தெய்வீகமானவை என்றும், அவற்றின் தெய்வீகத் தன்மையை அறியும் பேரதிர்ஷ்டம் உள்ளவர் உடனே முக்தி பெற்று பகவானின் இராஜ்ஜியத்திற்கு திரும்பிச் செல்ல தகுதியுடையவர் ஆகின்றார் என்றும் பகவத் கீதையில் பகவான் கூறியுள்ளார். எனவே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகத் தன்மை கொண்ட பிறவி மற்றும் செயல்கள் ஆகியவற்றின் அறிவு ஒன்று மட்டுமே முக்தி அடையப் போதுமானதாகும். பாகவதத்தின் முதல் ஒன்பது காண்டங்களில் பகவானின் தெய்வீகத் தன்மை விளக்கப்பட்டுள்ளது. பத்தாவது காண்டத்தில் அவரது அந்தரங்க லீலைகள் விளக்கப்பட்டுள்ளன. இந்நூலை ஒருவர் தொடர்ந்து படிக்கும்போது இவையெல்லாம் தானாக புலப்படும். பகவான் தமது தாயாரின் மடியிலிருந்தே தமது தெய்வீகத்தன்மையை காட்டியிருக்கிறார் என்பதை இங்கு குறிப்பிடுவது முக்கியமாகும். அவரது செயல்களெல்லாம் அமானுஷ்யமானவை ஆகும் (ஏழு வயதில் அவர் கோவர்தன மலையைத் தூக்கினார்). அவர் பரம புருஷ பகவான்தான் என்பதை இச்செயல்களெல்லாம் நிரூபிக்கின்றன. இருப்பினும், அவரது மாயத் திரையின் காரணமாக, அவரை ஒரு சாதாரண மனிதக் குழந்தையாகவே அவரது தாயும், தந்தையும், மற்ற உறவினர்களும் எப்பொழுதும் எண்ணினர். சில அற்புதமான செயல்களை அவர் செய்து காட்டும்பொழுதெல்லாம், தாயும், தந்தையும், மற்ற உறவினர்களும் எப்பொழுதும் எண்ணினர். சில அற்புதமான செயல்களை அவர் செய்து காட்டும்பொழுதெல்லாம், தாயும், தந்தையும் அவற்றை வேறொரு முறையில் புரிந்துகொண்டனர். மேலும், தங்களது மகனிடமிருந்த உறுதியான பெற்றோர் பாசத்தில் அவர்கள் திருப்தி கொண்டவர்களாக இருந்தனர். இவ்வாறாக, அவர் ஒரு மனிதரைப் போல் காணப்பட்டபோதிலும், உண்மையில் அவர்தான் சர்வ சக்தி படைத்த பரம புருஷ பகவான் என்று நைமிஷாரண்ய முனிவர்கள் விவரிக்கின்றனர்.


ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 1.1.20 / பொருளுரை )


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...