Skip to main content

பரம உன்னதமான ஞானத்தை பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும்

 


பாகவதம், சுமார் அரை டஜன் சுலோகங்களில், சுருக்கமாக, முழுமுதற் கடவுளால் பேசப்பட்டதும், பகவானின் சக்தி வாய்ந்த பிரதி நிதித்துவமுமாகும். அவர் பரிபூரணமானவர். ஆதலால், பகவத் விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து அவர் வேறுபட்டவரல்ல. இவ்விஞ்ஞானத்தை பிரம்மதேவர் பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார். பின் நாரதரிடம் இதை அவர் ஒப்படைத்தார். நாரதரும் அதை ஸ்ரீல வியாசதேவரிடம் ஒப்படைத்து அதை விரிவுபடுத்திக் கூறுமாறு கட்டளையிட்டார். எனவே பரமபுருஷரைப் பற்றிய உன்னத அறிவு, பௌதிக கல்விமான்களால் ஏற்படுத்தப்பட்ட மனக் கற்பனையல்ல. இது ஜடக் குணங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதும், பரிசுத்தமானதும் நித்தியமானதுமான பூரண அறிவாகும். எனவே பாகவத-புராணம் உன்னதமான ஓசை வடிவிலுள்ள பகவானின் நேரடியான அவதாரமாகும். இந்த உன்னதமான அறிவை ஒருவன் சீடப் பரம்பரையில் வரும் பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து பெற வேண்டும். இச் சீடப் பரம்பரை பகவானிடமிருந்து பிரம்ம தேவருக்கும், பிரம்மதேவரிடமிருந்து நாரதருக்கும், நாரதரிடமிருந்து வியாசருக்கும், வியாசதேவரிடமிருந்து சுகதேவ கோஸ்வாமிருக்கும் சுக தேவ கோஸ்வாமிக்குமாக சூத கோஸ்வாமிக்குமாக கீழிறங்கி வருவதாகும். வேதமெனப்படும் மரத்தின் பழுத்த பழம், உயர்ந்ததொரு கிளையிலிருந்து திடீரென்று பூமியில் விழுந்து உடைந்து விடாதபடி, ஒரு கையிலிருந்து மற்றொரு கைக்கு மாற்றப்பட்டு வருகிறது. எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல், பகவத் விஞ்ஞானத்தை ஒருவன் சீடப் பரம்பரையின் உண்மையான பிரதிநிதிடமிருந்து செவியுற வேண்டும். இல்லையெனில் பகவத் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்வது கடினம். ஜீவனோபாயத்திற்காக பாகவதம் கூறுபவர்கள், சபையோரின் புலன்களைத் திருப்திபடுத்துவதான் மூலம் வாழ்க்கைக்குரிய பொருளைச் சம்பாதிக்கின்றனர். இவர்களிடமிருந்து பாகவதத்தை ஒருபொழுதும் கேட்கவே கூடாது.


ஶ்ரீமத் பாகவதம் 2.7.51 / பொருளுரை


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...