Skip to main content

ஐந்து வகையான முக்தி மற்றும் தூய பக்தர்களின் விருப்பம்



ஸாலோக்யஸார்ஷ்டிஸாமீப்ய ஸாரூப்யைகத்வமப்யுத
தீயமானம் க்ருஹ்ருணந்தி வினா மத்ஸேவனம் ஜனா:


மொழிபெயர்ப்பு

ஒரு தூய பக்தர்ஸாலோக்யம், ஸார்ஷ்டி ஸாமீப்யம், ஸாரூப்யம் அல்லது ஏகத்வம் ஆகிய இப்பதவிகள் பரம புருஷ பகவானாலேயே கொடுக்கப்பட்டாலும் கூட, இத்தகைய எந்தவித விடுதலையையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.


பொருளுரை

தானாகத் தோன்றிய அன்பினால் பரம புருஷ பகவானுக்குப் புரியும் தூய பக்தித் தொண்டை எப்படி நிறைவேற்றுவது என்று பகவான் சைதன்யர் நமக்குக் கற்றுத் தருகிறார். சிக்ஷாஷ்டகத்தில், அவர் பகவானிடம் வேண்டுகிறார்: “ பகவானே, நான் உங்களிடமிருந்து எந்தச் செல்வத்தையும் பெறவோ, ஒரு அழகிய மனைவியைப் பெறவோ, என்னைப் பின்பற்றும் பலரையோ பெற விரும்பவில்லை, உங்களிடம் இருந்து நான் பெற விரும்புவது என்னவென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நான் உங்கள் பாத கமலங்களுக்குத் தொண்டு செய்யும் தூய பக்தனாக இருக்க வேண்டும்என்பதாகும். பகவான் சைதன்யரின் வேண்டுதல்களுக்கும் ஸ்ரீமத் பாகவதத்தின் கூற்றுக்களுக்குமிடையில் ஒற்றுமை உள்ளது. பகவான் சைதன்யர்ஒவ்வொரு பிறப்பிலும்என்று வேண்டுகிறார், இது ஒரு பக்தர் பிறப்பு இறப்புகளின் ஒழிவைக் கூட விரும்பவில்லை என்பதைக் குறிக்கிறது. யோகிகளும் உலகியல் பாற்பட்ட தத்துவவாதிகளும் பிறப்பு இறப்பு அற்ற வாழ்வினை விரும்புகின்றனர். ஆனால் ஒரு பக்தர் இந்த உலகத்தில் இருந்து கொண்டு பக்தித் தொண்டை நிறைவேற்றுவதில் திருப்தியடைகிறார்.


ஏகத்வம் எனும் பகவானுடன் ஒன்றிவிடும் தன்மையை மாயாவாதிகள் மனக் கற்பனையாளர்கள், தியானிப்பவர்கள் விரும்புதல் போன்று ஒரு தூய பக்தர் விரும்புவதில்லை என்பது இங்கு தெளிவாகக் குறிக்கப்படுகிறது. பகவானுடன் ஒன்றுதல் என்பது தூய பக்தரின் கனவுக்கு அப்பாற்பட்டதாகும். சிலசமயம் அவர் பகவானுக்குத் தொண்டு புரிவதற்காக, வைகுந்தத்தில் உயர் பதவி பெறுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவர் நரகத்தை விட மோசமானதாகக் கருதும் பிரம்ம ஒளியில் கலப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். அந்த ஏகத்வம் அல்லது பகவானின் ஒளியில் கலத்தல் என்பது கைவல்யம் எனப்படும். ஆனால் கைவல்யத்திலிருந்து பெறப்படும் மகிழ்ச்சியானது தூய பக்தரால் நரகமாகக் கருதப்படுகிறது. பக்தர் பகவானுக்குத் தொண்டு புரிவதில் அதிக ஆர்வம் கொண்டதால், விடுதலையின் ஐந்து வகைகள் அவருக்கு முக்கியமல்ல. ஒருவர் பகவானுக்குத் தூய உன்னத அன்புத் தொண்டு புரிவதில் ஈடுபட்டால், அவர் ஏற்கெனவே விடுதலையின் ஐந்து வகைகளை அடைந்துவிட்டார் என்பது புரிந்துகொள்ளப்படுகிறது.


ஒரு பக்தர் ஆன்மீக உலகான வைகுந்தத்திற்கு உயர்த்தப்படும் பொழுது, அவர் நான்குவித வசதிகளைப் பெறுகிறார். அதில் ஒன்று ஸாலோக்யம், பரம புருஷ பகவான் போல அதே கோளில் வசித்தல், பரமன், அவருடைய வேறுபட்ட முழு விரிவுகளில், எண்ணிலடங்கா வைகுந்தக் கோள்களில் வசிக்கிறார். இவற்றின் தலைமைக் கோள் கிருஷ்ண லோகமாகும். இந்த அண்டத்திற்குள் தலைமைக் கோளாக சூரியன் இருப்பதுபோல, ஆன்மீக உலகில் தலைமைக் கோள் கிருஷ்ண லோகமாகும். கிருஷ்ண லோகத்திலிருந்து கிருஷ்ண பகவானின் திவ்ய மங்கள உடல் ஒளி ஆன்மீக உலகிற்கு மட்டும் அல்லாமல் பிறவுலகிற்கும் வழங்கப்படுகிறது. ஆயினும், இந்தவுலகில் அது பொருளால் மூடப்பட்டுள்ளது. ஆன்மீக உலகில் எண்ணிலடங்கா வைகுந்தக் கோள்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பகவானே முதன்மையான தெய்வம் ஆவார். பக்தர் பரம புருஷ பகவானுடன் வசிக்க அம்மாதிரி ஒரு வைகுந்தக் கோளுக்கு உயர்த்தப்பட முடியும்.


ஸார்ஷ்டி விடுதலையில் பக்தரின் ஐஸ்வர்யமும் பகவானின் ஐஸ்வர்யமும் சமமாகும். ஸாமீப்யம் என்றால் பகவானுக்கு நெருங்கிய தோழராக இருத்தல் என்று பொருள். ஸாரூப்ய விடுதலையில் பக்தரின் உடல் தோற்றங்கள் பகவானின் தெய்வீக உடலில் சிறப்பாகக் காணப்படும் இரண்டு அல்லது மூன்று அடையாளங்களைத் தவிர மற்றவை பகவானுடையதுபோலவே தோன்றுகின்றன. சான்றாக, ஸ்ரீ வத்ஸம் எனும் பகவானின் மார்பில் உள்ள சுருள் மயிர் குறிப்பாக அவரை அவரது பக்தர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.


ஒரு தூய பக்தர் ஐந்துவித ஆன்மீக வாழ்வை அவை வழங்கப்பட்ட போதிலும் ஒப்புக்கொள்வதில்லை. அவர் நிச்சயமாக ஆன்மீக பயன்களுடன் ஒப்பிடும் பொழுது, முக்கியமற்ற உலகியல் பயன்களுக்கு விருப்பப்படுவதில்லை. பிரஹ்லாத மஹாராஜாவுக்குச் சில ஜடப் பலன்கள் அளிக்கப்பட்ட பொழுது, அவர் குறிப்பிட்டார். “என் பகவானே, நான் என் தந்தையார் எல்லாவித பலன்களையும் அடைந்ததைப் பார்த்திருக்கிறேன். தேவர்களும் அவரது அளப்பரிய செல்வத்தை பார்த்து அச்சப்பட்டனர். ஆயினும், ஒரு நொடியில் அவர் வாழ்வையும், அவரின் எல்லா உடைமைகளையும் முடித்து விட்டீர்கள்.” ஒரு பக்தருக்கு ஜடவுலக அல்லது ஆன்மீகச் செல்வத்தை விரும்புவது பற்றிய வினாவே எழாது. அவர் பகவானுக்குத் தொண்டு செய்யவே விரும்புகிறார். அதுவே அவரின் மிகவுயர்ந்த மகிழ்ச்சியாகும்.


ஶ்ரீமத் பாகவதம் 3.29.13



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...