நாமாசாரியர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூர் வழங்கியவர்: திருமதி. கீதா கோவிந்த தாஸி 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தினம் தோறும் மூன்று லட்சம் நாமத்தை உச்சாடனம் செய்த நாமாசாரியர் ஸ்ரீல ஹரிதாஸ தாகூரின் வாழ்க்கை வரலாறு 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாமாசாரியர் என்னும் சமஸ்கிருத சொல், 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 நாம, ஆசாரியர் என்னும் இரு சொற்களின் கூட்டுச் சொல்லாகும். நாம என்பது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தைக் குறிக்கும். ஆசாரியர் என்றால் தன்னுடைய நன்னடத்தையின் மூலம் மற்றவர்களுக்கு போதிப்பவர் என்று பொருள். ஸ்ரீ கிருஷ்ணரின் திருநாமத்தை தானும் உச்சரித்து மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பவரை நாமாசாரியர் என்று அழைக்கலாம். பகவான் சைதன்யர் தனது முக்கியமான சீடர்களில் ஒருவரான ஹரிதாஸ தாகூருக்கு இப்பட்டத்தைச் சூட்டி கௌரவித்தார். ஹரிதாஸ தாகூர் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தற்போதைய சத்-கிரா மாவட்டத்திலுள்ள (முற்காலத்தில் குல்னா பகுதியின் கிளையாக இருந்த) புடான் என்னும் கிராமத்தில் ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். சைதன்ய மஹாபிரபுவைவிட 35 வருடங்கள் மூத்தவரான இவர், வங்காளதேசத்தில் தனது கிராமத்தில் சிலகாலம் வசித்த பின்னர், சாந்தி பூருக்கு அ...