பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -7 வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் அத்தியாயம் ஏழு : பூரணத்தின் ஞானம் ஆறாம் அத்தியாயத்தின் சுருக்கம் தியான யோகத்தின் ஆரம்ப நிலையில் செயல் வழியாகவும் உயர் நிலையில் செயல்களைத் துறத்தல் வழியாகவும் உள்ளது என்று கூறிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், மனமே ஒருவனின் நண்பனாகவும் எதிரியாகவும் இருப்பதால், மனதைக் கொண்டு ஒருவன் தன்னை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்றும் தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்றும் கூறினார். மேலும், இதயத்தில் வசிக்கும் பரமாத்மாவின் மீது தியானம் செய்யும் தியான யோக வழிமுறையும் எடுத்துரைக்கப்பட்டது. கிருஷ்ணரிடமிருந்து அஷ்டாங்க யோகத்தைக் கேட்ட அர்ஜுனன், அதன்படி மனதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும் கடினமானது என்று வாதாடினான். மனதைக் கட்டுப்படுத்துதல் நிச்சயமாகவே கடினம் என்று ஏற்றுக்கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பயிற்சியின் மூலமாகவும் பற்றின்மையின் மூலமா கவும் மனதைக் கட்டுப்படுத்த முடியும் என்று பதிலளித்தார். யோக முயற்சியில் வெற்றியடையாத யோகியின் நிலை என்ன என்ற கேள்விக்கு, அவர்கள் நல்லோர்களின் குடும்பத்திலோ, செல்வந்தர்...