கீதா மஹாத்மியம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் ஶ்ரீமத் பகவத் கீதை ஏழாம் அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை ஏழாம் அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 7 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், "எநதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் ஏழாம் அத்தியாயத்தின் மஹிமையை பற்றி கூறப்போகிறேன். இதை கேட்ட்பவர்கள், காதில் அமிர்தம் பாய்வது போல் உணர்வார்கள்". பாடலிபுத்ரா என்னும் பெரும் நகரத்தில், சங்குகர்ணா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வணிகம் செய்து பெரும் செல்வதை ஈட்டிவைத்திருந்தார். ஆனால் பகவானுக்கு எந்தவித பக்தி தொண்டும் செய்த்ததில்லை; அதேபோல் மூதாதையர்களுக்கு எந்த தர்பணமும் செய்த்ததில்லை. ஆனால் பல மன்னர்களை தன் இல்லத்திற்கு அழைத்து வந்து உபசரிக்கும் அளவிற்கு மிகுந்த செல்வம் அவரிடம் இருந்தத...