Skip to main content

Posts

Showing posts with the label Ganga Mata Goswamini / கங்காமாதா கோஸ்வாமினி (VAH)

கங்காமாதா கோஸ்வாமினி

  கங்காமாதா கோஸ்வாமினி இன்றைய வங்காள நாட்டில் (தற்போதைய பங்களாதேஷ்) ராஜ்ஷாஹி என்ற மாநிலத்தில்  உள்ள புந்தியாவின்  அரசர் நரேஷ் நாராயணாரின் ஒரே மகளாவார்.  அவருடைய குழந்தை பருவத்தில் அவர் சச்சி என்று அழைக்கப்பட்டார். தனது இளவயது முதலே பகவத் விசயங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். மேலும் குறுகிய காலத்திற்குள்ளேயே, வியாகரணங்கள், காவியங்கள் மற்றும் பல சாஸ்திரங்கள் குறித்து உரையாட ஆரம்பித்தார். சச்சி வளர்ந்ததும் அவரது அழகும், கருணையும் அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அவருடைய மனம் முழுமையாக மதனகோபாலனிடம் ( பகவான் ஶ்ரீ கிருஷ்ணரிடம்)  ஈர்க்கப்பட்டிருந்தது. அவருடைய பெற்றோர்கள் அவருக்கு திருமண ஏற்பாடு செய்வதை அறிந்த அவர், தான் பெளதிக வாழ்க்கையில் ஈடுபட விரும்பவில்லை என்றும் தான் முழுமுதற் கடவுள் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள விரும்புவதாகவும் உறுதியாக கூறினார். சச்சியின் இந்த முடிவால் அவரின் பெற்றோர்கள் மிகவும் கலக்கம் அடைந்தனர்.  சிறிது காலத்திற்குப் பிறகு அரசனும் அரசியும் உடல் நலக் குறைவினால்  மரணம் அடைந்தனர். அவர்களுடைய மறைவிற்கு பிறகு அரச...