பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யுதிஷ்டிர மஹராஜாவும் ஸ்வபஜா வால்மிகா என்ற ஸாதுவும் ( இந்த கதையானது ஜைமினி ரிஷி எழுதிய மஹாபாரதத்தில் உள்ளதாகும்) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராஜஸுய யாகம் நிறைவடைந்த பிறகு மஹாராஜா யுதிஷ்டிரர் பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமான தானங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரிடம் எனது சேவையில் அனைத்து பிராமணர்களும் வைஷ்ணவர்களும் திருப்தியடைந்தனரா என்பதை எவ்வாறு நான் அறிந்து கொள்வது என்று வினவினார். அதற்கு கருணையுள்ள பகவான், அவருடைய சங்கை ஒரு இடத்தில் வைத்து பின் கூறினார். விருந்தினர் அனைவரும் திருப்தியடைந்தனர் என்றால் இந்த சங்கு தானாகவே முழங்கும் என்றார். மஹராஜா யுதிஷ்டிரர் எல்லா பிராமண மற்றும் வைஷ்ணவ விருந்தினர்களுக்கும் மிகுந்த அக்கறையுடன் சேவைகள் செய்தார். ஆனால் முடிவில் அந்த சங்கானது முழங்கவில்லை. இதனால் மன்னர் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை அறிய விரும்பி பகவான் கிருஷ்ணரின் உதவியை பணிவுடன் வேண்டினாார். அதற்கு பகவான், நகருக்கு அப்பால் ஸ்வபஜா வால்மிகா என்ற மிகவும் பணிவா...