Skip to main content

Posts

Showing posts with the label Ashtasakhi / அஷ்ட சகிகள் (Story)

சித்ரா சகி (தோழி)

  ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகளில் இவரும் ஒருவர். பிருந்தாவனத்தின் ராணியான ஸ்ரீராதைக்கு சகி (தோழி), ப்ரிய-சகி (அன்புத் தோழி), பரமப்ரேஸ்ட/வரிஷ்ட சகி (நெருங்கிய), ப்ராண சகி (உயிர்த்தோழி) மற்றும் நித்திய சகி (பிரியா தோழி) என்று 5 வகையான சகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. உஜ்வல நீலமணி (4.50) ராதாராணியை விட இவர் 26 நாட்கள் பெரியவர். குங்குமம் போன்ற சிவப்பு நிறத்தை உடையவர். ஸ்படிக நிற ஆடைகளை விரும்பி அணிகிறார். கவிதைகள் மற்றும் சாஸ்திரங்களில் உள்ள சூக்ஷ்மமான அர்த்தங்களை புரிந்துகொள்வதில் இவர் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். மிகவும் சாந்த குணம் கொண்டவர். சமையற் கலையில் நல்ல அனுபவம் மிக்கவர். பலவிதமான அமுத பானங்களை தயாரித்து திவ்ய ஜோடிகளுக்கு பரிமாறுவார். மேலும் பதார்த்தங்களை கண்ணால் கண்ட மாத்திரத்தில், அதன் மூலப்பொருட்களையும் தரத்தையும் கூறிவிடுவார். கிராம்பு மற்றும் மலர் மாலைகளைக் கொண்டு வரும் சேவையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். தன் தந்தையைப் போலவே வானியல், ஜோதிடம் மற்றும் தோட்டக் கலை ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தவர். காதலரின் சண்டையில் சமரசம் செய்வதில் திறமையானவர். பக...

துங்கவித்யா தேவி

  துங்கவித்யா தேவி ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகள் பல ஆயிரம் கோபியர்களில் பதினாறாயிரம் பேர் முதன்மையானவர்கள் என்றும், அவர்களில் 108 கோபியர்கள் மிக நெருக்கமானவர்கள் என்றும், 8 பேர் இன்னும் முக்கியமானவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராதையும் சந்திராவல்லியும் அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். ஸ்ரீராதையோ அனைவரிலும் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கவரும் அத்தனை வசீகரமும், இனிமையும் ஸ்ரீ ராதைக்கு மட்டுமே உண்டு. ஸ்ரீ ராதாராணியை விட துங்கவித்யா தேவி 15 நாட்கள் இளையவர். துங்கவித்யா தேவி குங்கும நிறத்தையும், கற்பூரம் கலந்த சந்தன நறுமணத்தையும் உடையவர். மேலும் வெண்மை நிற ஆடைகளை அவர் மிகவும் விரும்பி அணிகிறார். துங்கவித்யா தேவி கொஞ்சம் முன்-கோபம் கொள்ளும் குணம் உடையவர். ரச-சாஸ்திரம், நிதி- சாஸ்திரம், நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் 18 புராணங்களையும் கற்றுத் தேர்ந்தவர். பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும், அதை பிறருக்கு கற்றுத்தருவதிலும் துங்கவித்யா தேவி மிகவும் நிபுணத்துவம் கொண்டவளாவர். தன்னுடைய இசையினால் ஶ்ரீ ராதா கிருஷ்ண திவ்ய தம்பதிகளை மகிழ்விப்ப...