Skip to main content

Posts

Showing posts with the label 07.Prayers by Kardama Muni /கர்தம முனிவரின் பிரார்த்தனைகள்

கர்தம முனிவரின் பிரார்த்தனைகள்

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 3 / அத்தியாயம் 24 / பதம் 28- 33 ************************************************************************* பதம் 28 பஹுஜந்மவிபக்வேன ஸம்யக்யோக ஸமாதினா த்ரஷ்டும் யதந்தே யதய : சூந்யாகாரேஷு யத்பதம் மொழிபெயர்ப்பு பல பிறவிகளுக்குப் பிறகு பக்குவமடைந்த யோகிகள் , மெய்மறந்த யோக நிலையில் , பரம புருஷ பகவானின் பாத கமலங்களைக் கண்ணாற் காண்பதற்குத் தனித்த இடங்களில் முயற்சி செய்வர் . பதம் 29 ஸ ஏவ பகவானத்ய ஹேலனம் நகணய்ய ந : க்ருஹேஷு ஜாதோ க்ராம்யாணாம் ய : ஸ்வானாம் பக்ஷபோஷண : மொழிபெயர்ப்பு நம்மைப் போன்ற சாதாரண குடும்பத் தலைவர்களின் கவனக் குறைவைக் கருதாமல் , அதே பரம புருஷ பகவான் , அவரின் பக்தர்களுக்கு உதவி புரிய நம் இல்லங்களில் தோன்றுகிறார் .   பதம் 30 ஸ்வீயம் வாக்யம்ருதம் கர்தும் அவதீர்ணோஸிமே க்ருஹே சிகீர்ஷுர்பகவான் ஞானம் பக்தானாம் மானவர்தன மொழிபெயர்ப்பு கர்தம முனிவர் கூறினார் : உங்கள் பக்தர்களின் மதிப்பை எப்போதும் அதிகரிக்கும் என் அன்புள்ள பகவானே , நீங்கள் உங்கள் வார்த்தையை செயற்படுத்தவும் , உண்மை அறிவின் நெறிமுறையைப் பரப்பவும் எ...