Skip to main content

Posts

Showing posts with the label Ratha Yatra Lila / ரதயாத்திரை லீலை (Story)

சாலபேகா

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகாலய மன்னருக்கு கீழ் படைத்தளபதி பொறுப்பு வகித்தவர் 'லால்பேகா'. இவர் ஜெகன்னாதரின் பக்தை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் தந்தைக்கும் சநாதன தர்மத்தை சார்ந்த ஜெகந்நாதரின் பக்தைக்கும் பிறந்தவர் தான் சாலபேகா. லால்பேகாவை போன்று, சாலபேகாவும் மிகச் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார். தன் தந்தைக்கு பின், சலபேகா போர் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு சாதனைகள் பல படைத்தார். ஒருசமயம் நடந்த போரில், எதிரிகளின் கடுமையான தாக்குதல்களால் படுகாயம் அடைந்தார் சாலபேகா. எத்தனையோ மருந்துகள் அளித்தும் பயனளிக்கவில்லை. வேதனையால் மிகவும் துடித்தார் சாலபேகா. அப்போது அவரது தாயார், ஜெகன்னாதரை வழிபடுமாறு அறிவுரை கூறினார். தாயின் அறிவுரையை ஏற்ற சால பேகா, ஜெகன்னாதரின் திருநாமங்களை உச்சரித்து மனம் உருகி வழி பட்டார். ஆச்சர்யப்படத் தக்க வகையில் சாலபேகா அன்றிரவே, ஜெகன்னாதரின் அருளால் பூரண குணம் அடைந்தார். ஜெகன்னாதரை தரிசிக்க முதல் முயற்சி 🌷🌷🌷🌷🌷🌷 உடல் நலம் பெற்ற உடனேயே சாலபேகா, ஜெகன்னாதரை தரிசித்து நன்றி செலுத்த வேண்டும் என்று, ஜெகன்னாதர் கோயிலுக்கு விரைந்து சென்றார். ...

பணிவினால் பக்குவம் பெற்ற பிரதாபருத்ரர்

  அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் அருளிய ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தின் மொழிபெயர்ப்பு மற்றும் பொருளுரையிலிருந்து எடுக்கப்பட்டது.                                🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 சுமார் ஐந்நூறுவருடங்களுக்கு முன்பு பிரதாபருத்ரர் என்னும் மன்னர் ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தார். அவர் பரம புருஷ பகவானான ஸ்ரீ கிருஷ்ணரின் சிறந்த பக்தர். ஜகந்நாத பூரியிலுள்ள ஸ்ரீ ஜகந்நாதரை அவர் வழிபட்டு வந்தார். பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியிலே வசிப்பதைக் கேள்விப்பட்டு. அவரை தரிசிப்பதற்கு ஆவல் கொண்டார். ஆனால் கிருஷ்ணருக்கான தூய பக்தித் தொண்டை பிரச்சாரம் செய்வதற்காகத் துறவறம்மேற்கொண்டிருந்த ஸ்ரீசைதன்ய மஹாபிரபு. சந்நியாச வாழ்விற்கான அனைத்து விதிமுறைகளையும் தீவிரமாகப் பின்பற்றியதால், பெளதிக விஷயங்களில் ஈடுபட்டுள்ள மன்னர் பிரதாபருத்ரரைப் போன்றவர்களைச் சந்திப்பதை அவர் விரும்பவில்லை. பகவான் சைதன்யர் பண்டிதரான சர்வபௌம் பட்டாசாரியரின் இல்லத்தில் தங்கியிருப்பதை அறிந்த ம...

பிள்ளை பருவத்தில் ஸ்ரீல பிரபுபாதர் கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாத ரதயாத்திரை

  'ஸ்ரீல பிரபுபாதா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார். 1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் 'அபய்சரண்தே '. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை  கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம்.  ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள். ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியா...