Skip to main content

Posts

Showing posts with the label Rupa Goswami / ரூப கோஸ்வாமி (VAH)

ரூப கோஸ்வாமி

  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மனதை முற்றிலுமாக அறிந்த    கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர் ( வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ்) 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் . வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார் . அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி . கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது , அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும் , சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை . ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார் . அதிலும் குறிப்பாக , ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது . எனவே , கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப...