Skip to main content

Posts

Showing posts with the label 09) பகவத் கீதை அத்தியாயம் - 9

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -9

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -9 மிக இரகசியமான அறிவு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் எட்டாம் அத்தியாயத்தின் சுருக்கம் ஏழாம் அத்தியாயத்தின் இறுதியில் கிருஷ்ணர் உபயோகித்த சில வார்த்தைகளுக்கு, எட்டாம் அத்தியாயத்தின் தொடக்கத்தில் அர்ஜுனன் விளக்கம் கேட்டதால், கிருஷ்ணர் அவற்றை விளக்கினார். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் பொதுவான கேள்விகளுக்கு சுருக்கமான பதிலை வழங்கி விட்டு, மரண நேரம் குறித்த கேள்வியை மட்டும் விளக்கமாக எடுத்துரைத்தார். மரண நேரத்தில் கிருஷ்ணரை நினைப்பவன், நிச்சயமாக கிருஷ்ணரை அடைய முடியும். உண்மையில், மரண நேரத்தில் ஒருவன் எந்த நிலையை நினைத்தாலும், நிச்சயம் அதனை அடைவான். எனவே, ஒருவன் தனது வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணரை நினைக்கப் பழக வேண்டும், அவ்வாறு பழகுபவனால் மரண நேரத்தில் கிருஷ்ணரை எளிதில் நினைக்க முடியும். கிருஷ்ணரை யோகப் பயிற்சியின் மூலம் நினைக்க விரும்புபவர்கள், அவரை எல்லாமறிந்தவர், கட்டுப்படுத்துபவர் என்று நினைப்பர். தூய பக்தர்களோ பிறழாத மனதுடன் எப்போதும் கிருஷ்ணரின் நேரடியான அன்புத் தொண்டில் ஈடுபட்டு, அவரை ஒருபோதும் மறக்க முடியாத நிலையில் உள்ளனர். அத்தகு மக...