Skip to main content

Posts

Showing posts with the label Snana Yatra / ஸ்நான யாத்திரை(FA)

ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை

  இந்திரத்யும்ன மஹாராஜ கோலாகலமாக கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை  🔆🔆🔆🔆🔆🔆 ஜேஷ்ட மாதத்தின் (ஆனி மாதம்) பௌர்ணமி தினத்தில், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள்  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பகவான் ஜெகந்நாதர், பலதேவர் மற்றும் சுபத்திரா தேவி ஆகியோரை, சுதர்ஷனத்துடன் கர்பகிரகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து ஒரு மேடையில் அமர்த்துவர். பின்னர் இவர்கள் தங்க கலசங்களின் புனிதநீரை கொண்டு விமர்சையாக நீராட்டுவர்.  நீராட்டு முடிந்த பின்னர், பகவான் ஜெகந்நாதர் கணேசரின் ரூபத்தில் காட்சியளிப்பார். இந்த நீராட்டு விழாவை தேவர்களும் விமர்சையாக கொண்டாடுவர். பிரம்மாவின் தலைமையில், அனைத்து தேவர்களும் பாரிஜாத மலரின் சாரை கொண்ட நறுமண கங்கை நீரை தங்களது சிரசின் மேல் சுமந்து வந்து பகவானை கோலாகலமாக நீராட்டுவர். பின்னர் தங்களது பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்வர்.  அனைத்து தேவர்களும் இந்த விழாவை சவுகரியமாக காணவேண்டும் என்பதற்காக இந்திரத்யும்ன மஹாராஜர் பெரிய பந்தலை நிர்மாணம் செய்தார். மேலும் பகவான் அமர்த்தப்ப...

அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)

  அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை)  பகவான் ஜெகந்நாதரின் அபிஷேக திருவிழா (ஸ்நான யாத்திரை) எப்பொழுது நடைபெறும் என்று ஸார்வபௌம பட்டாட்சியரிடம் மன்னர் பிரதாபருத்ரர் வினவியபோது, அதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன என்று பட்டாச்சாரியர் பதிலளித்தார்.  மன்னருக்கு இவ்வாறு ஊக்கமளித்துவிட்டு,  ஸரர்வபௌம பட்டாச்சாரியர் தமது இல்லத்திற்குத் திரும்பினார். பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரை நாளன்று,  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு  இதயத்தில் மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார்.  பகவான் ஜெகந்நாதரின் ஸ்நான யாத்திரையைக் கண்டு , ஶ்ரீ சைதன்ய மகாபிரபு பெரிதும் மகிழ்ச்சியுற்றார். ஆனால் அந்த விழாவிற்குப் பிறகு பகவான் ஜெகன்நாதர் ஓய்வெடுத்த காலத்தில், அவரை காண இயலாததால் சைதன்ய மகாபிரபு மிகவும் வருத்தமுற்றார் ரத யாத்திரை திருவிழாவிற்குப் 15 நாட்கள் முன்பாக நடைபெறும் ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்நான யாத்திரை நிகழ்ச்சிக்குப் பின்னர்,  ஜெகன்நாத விக்கிரகத்தின் திருமேனியில் மீண்டும் வண்ணம் தீட்டப்படுகிறது. இது முடிவுறுவதற்கு சுமார் 15 நாட்கள் ஆகின்றது.  இந்த காலமானது "அனவஸர " என்று சொல்லப்படுகிறது. ப...