Skip to main content

Posts

Showing posts with the label Chaturmas Fasting / சாதுர்மாஸ்ய விரதம் (Festival Articles)

சாதுர்மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் வழிமுறை

🍁அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து குளித்த பிறகு, மங்கள ஆரத்தி செய்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். 🍁தினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நெய் தீபமேற்றி வணங்கி வர வேண்டும். 🍁உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று. 🍁ஜபம் செய்யும் போதும் கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது. 🍁மாதம் முழுவதும் பிரம்மசரிய விரதம் கடைபிடித்தல் அவசியம். 🍁 நான்கு விதிமுறைகளை பின்பற்றுதல் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 (1) மது அருந்தாமை ( மது அருந்துபவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான். அதாவது, புலன்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கின்றான். ) (2) தகாத பாலுறவில் ஈடுபடாமை ( சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஈடுபடுபவன் அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டையும் இழக்கிறான். ) (3) மாமிசம் உண்ணாமை ( வயிற்றை நிரப்புவதற்காக அப்பாவி ம...

சாதுர்மாஸ்ய விரதம்

  சாதுர்மாஸ்ய காலம் என்பது ஆஷாட (ஜூன் - ஜூலை) மாதத்தில் வளர்பிறை ஏகாதசியான ஷயன ஏகாதசியிலிருந்து தொடங்கி, கார்த்திக (அக்டோபர் - நவம்பர் )மாதத்தின் வளர்பிறை ஏகாதசியான உத்தான ஏகாதசியன்று முடிகிறது. இந்த நான்கு மாத காலமானது சாதுர்மாஸ்யம் என்று அறியப்படுகிறது. வைஷ்ணவர்கள் சிலர் இதனை ஆஷாட மாதத்தின் பௌர்ணமி நாளிலிருந்து கார்த்திக மாதத்தின் பௌர்ணமி நாள் வரை அனுசரிக்கின்றனர். இதுவும் நான்கு மாத காலமாகும். சந்திர மாதங்களை வைத்துக் கணக்கிடப்படும் இந்த காலம் சாதுர்மாஸ்யம் எனப்படுகிறது. சூரிய மாதத்தில் பின்பற்றுவோர் சிராவண மாதத்திலிருந்து கார்த்திகை மாதம் வரை சாதுர்மாஸ்யத்தை அனுசரிக்கின்றனர். சூரிய மாதமோ சந்திர மாதமோ, ஒட்டுமொத்த காலமும் மழைக்காலத்தின்போது வருகிறது. சாதுர்மாஸ்யம் எல்லா தரப்பட்ட மக்களாலும் அனுசரிக்கப்பட வேண்டும். கிருஹஸ்தரா சந்நியாசியா என்பது பொருட்டல்ல. இதை அனுசரிப்பது எல்லா ஆஷ்ரமங்களுக்கும் கடமையாகும். இந்த நான்கு மாத காலத்தின்போது மேற்கொள்ளப்படும் விரதத்தின் உண்மையான குறிக்கோள் புலனுகர்ச்சியின் அளவை குறைத்துக் கொள்வதாகும். இது கடினமானதல்ல.  * இந்த விரத காலங்களில் அசைவம் உ...