கீதா மஹாத்ம்யம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 1 பற்றிய வர்ணனை பார்வதி தேவி கூறினார், "என் பிரியமான கணவரே, நீர் அணைத்து ஆன்மீக உண்மைகளையும் அறிந்தவர். உம்முடைய கருணையால் நான், முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை பற்றிய சிறப்புகள் அனைத்தையும் கேட்டறிந்தேன். இப்பொழுது ஸ்ரீமத் பகவத் கீதையை பற்றிய சிறப்புகளை பற்றி கேட்க மிகவும் ஆவலாக உள்ளேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் உரைக்கப்பட்ட பகவத் கீதையையும் அதன் சிறப்புகளையும் கேட்பதால் ஒருவருக்கு பகவான் கிருஷ்ணரின் மீதுள்ள பக்தி அதிகரித்துக்கொண்டேயிருக்கும்”. சிவபெருமான் கூறினார், "யாருடைய உடல் கார்மேக வண்ணத்தில் உள்ளதோ, யாருடைய வாகனம் பறவைகளின் தலைவனோ, யார் ஆயிரம் தலைகள் கொண்ட அனந்த சேஷன் மீது துயில் கொண்டுள்ளாரோ, யாருடைய வர்ணனை எல்லைக்கு அப்பாற்பட்டதோ, அந்த பகவான் விஷ்ணுவை நான் வழிபடுகிறேன். என் பிரியமான பார்வதி, ஒரு முறை பகவான் விஷ்ணு, முரா என்னும் அரக்கனை வதம் செய்து விட்டு அனந்த சேஷன் மீது ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது, அதிர்ஷ்ட தேவதையான மஹாலக்ஷ்மி, அவரிடம் பின்வரும...