பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும், அர்ஜுனனும் துவாரகையைச் சேர்ந்த ஒரு பிராமணரின் இறந்த புத்திரிகளை மீட்டிய லீலை
ஒருசமையம் துவாரகையில் ஒரு பிராமணரின் மனைவிக்குக் குழந்தை பிறந்து உடனே இறந்துவிட்டது . பிராமணரும் உயிரற்ற தன் மகனை மன்னர் மகாசேனரின் சபைக்கு எடுத்துச் சென்று , அரசரைப் பின்வருமாறு திட்டினார் . பீராமணர்களைப் பகைப்பவனும் , வஞ்சகனுமான இவன் தன் கடமைகளை சரியாக நிறைவேற்றத் தவறியதால் தான் என் மகன் இறந்து போனான் . அந்த பிராமணரின் இந்த துர்பாக்கியமான நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது . பிராமணர் ஒவ்வொரு முறையும் தன் இறந்த குழந்தையை அரச சபைக்குக் கொண்டு வந்து போட்டு முன்போலவே அரசரைத் திட்டினார் . அம்மாதிரியே அவரது ஒன்பதாவது குழந்தையும் இறந்து போய் , அவரது புலம்பலைக் கேட்க நேர்ந்த அர்ஜுனன் பிராமணரே இனி உண்டாகும் உமது குழந்தையை நான் காப்பாற்றுவேன் . இதை நான் செய்யத் தவறினால் , அக்கினிப் பிரவேசம் செய்து அதனால் என் பாவத்தைப் போக்கிக் கொள்வேன் என்று கூறினார் . சில காலத்திற்க்குப் பிறகு அந்த பிராமணரின் மனைவி பத்தாவது குழந்தையை ஈன்றெடுக்கும் தறுவாயிலிருந்தாள் . அதைக் கேள்விப்பட்ட அர்ஜுனன் , பிரசவ அறைக்குச் சென...