ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 பூஞ்சோலை ஓர் அழகிய நாடு. அந்நாட்டை நீதிநெறி தவறாமல் விஷ்ணுவரதன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அந்த அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தான். விஷ்ணுவரதனின் ஆட்சியில் மக்கள் எந்த ஒரு குறையும் இன்றி மகிழ்ச்சியாக இருந்தனர். ஒருநாள் அரசர் ஊர் திருவிழாவில் அந்தணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடுகள் தடபுடலாக செய்து கொண்டிருந்தார். அச்சமயம் வானில் ஒரு கழுகு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு உணவருந்தும் இடத்திற்கு மேல் பறந்துச் சென்றது. அப்பொழுது எதிர்பாராத விதமாக பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் சமைத்து வைத்திருந்த உணவில் விழுந்து விட்டது. இதை யாரும் கவனிக்கவில்லை. எதையும் அறியாத அரசன் அந்த உணவை அந்தணர்களுக்கு அளித்தார். அந்த உணவை உண்ட மறுகணமே அந்தணர்கள் உயிர் துறந்தார்கள். இதைக் கண்டு அரசர் மிகவும் வருத்தம் கொண்டார். கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது. இந்த கர்மவினையை யாருக்கு கொடுப்பது.? கழுகிற்கா? பாம்பிற்கா? அல்லது அரசனுக்கா? கழுகு அதன் இரையைத்...