Skip to main content

Posts

Showing posts with the label Vamana Avatar Lila / வாமன அவதாரம் லீலைகள் (Story)

தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல்

    ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  9   தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பலி மகாராஜன் எப்படி தமது பாட்டனாரான பிரகலாத மகாராஜனுடன் சுதள லோகத்திற்குள் புகுந்தார் என்பதையும், எப்படி பரமபுருஷ பகவான் இந்திரனை சுவர்கக லோகத்தில் மீண்டும் புக அனுமதித்தார் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின் பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன் அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப் பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள் புகுந்தார். இவ்வாறாக பரமபுருஷ அதிதியின் ஆசையை நிறைவேற்றி தேவேந்திரனை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பலி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பிரகலாத மகாராஜன், பிறகு பரமபுருஷ பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய தெய்...

பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல்

  ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  8   பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த இருபத்திரண்டாம் அத்தியாயத்திற்கான சுருக்கம் பின்வருமாறு: பலி மகாராஜனின் நடத்தையில் பரமபுருஷ பகவான் மகிழ்ந்தார். இவ்வாறாக சுதள லோகத்தில் அவரை வைத்த பகவான், அவருக்கு வரங்களை அளித்தபின், அவரது வாயில் காப்போனாக இருக்கச் சம்மதித்தார். பலி மகாராஜன் மிக மிக உண்மையானவராக இருந்தார். சத்தியத்தை மீறியவர் சமூகத்தின் கண்களில் அற்பமானவராகத் தோன்றுவார் என்பதால், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத பலி மகாராஜன் பெரும் அச்சத்திற்குள்ளானார். உயர்ந்த நிலையில் இருப்பவரால் நரக வாழ்வில் பலன்களை சகித்துக் கொள்ள முடியும். ஆனால் சத்தியத்திலிருந்து விலகியதால் ஏற்படும் அவதூறுக்கு அவர் மிகவும் அஞ்சுகிறார். பரமபுருஷரால் அளிக்கப்பட்ட தண்டனையை பலி மகாராஜன் பெரு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். விஷ்ணுவிடம் விரோதம் கொண்டதால், பல அஷ்டாங்க பலி மகாராஜனின் வம்சத்தில் பலர் இருந்தனர். குறிப்பாக பிரகலாத மகாராஜனுக்கு பக்தித் தொண்டில் இருந்...

பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல்

    ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  7   பலி மகாராஜன் பகவானால் கைது செய்யப்படுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பலி மகாராஜனின் பெருமைகளை பகவான் விஷ்ணு விளம்பரப்படுத்த விரும்பினார். எனவே பகவானின் மூன்றாவது அடி சம்பந்தமாக, தமது வாக்கை நிறைவேற்றத் தவறிய பலி மகாராஜனை பகவான் எப்படி கைது செய்தார் என்பதை இவ்வத்தியாயம் விவரிக்கின்றது. இரண்டாவது அடியினால் பரமபுருஷர் பிரபஞ்சத்தின் மிகவுயர்ந்த கிரகமாகிய பிரம்ம லோகத்தையும் அடைந்து, அதன் அழகைத் தமது பாத விரல்களின் நகங்களிலிருந்து தோன்றிய பிரகாசத்தினால் மங்கச் செய்துவிட்டார். இவ்வாறாக, மரீசியைப் போன்ற சிறந்த முனிவர்களாலும், எல்லா உயர் கிரகங்களின் அதிபதிகளாலும் சூழப்பட்டிருந்த பிரம்மதேவர், தமது பணிவான வணக்கங்களை பகவானுக்குச் சமர்ப்பித்து அவரை வழிபட்டார். பகவானின் பாதங்களை அவர்கள் கழுவி, எல்லாப் பொருட்களைக் கொண்டும் அவர்கள் பகவானை வழிபட்டனர். ரிக்ஷராஜனான ஜாம்பவான் பகவானுடைய பெருமைகளை ஒலிக்கச் செய்வதற்காக தனது தும் சங்கீதக் கருவியை இசைத்தார். பலி மகாராஜனின் உடைமைகள் அ...

பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்

  ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  6   பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இந்த இருபதாம் அத்தியாயத்தின் சுருக்கம் பின்வருமாறு: பகவான் வாமனதேவர் தம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறிந்தும், பலி மகாராஜன் அனைத்தையும் அவருக்கு தானமாகக் கொடுத்து விடுகிறார். இவ்வாறாக பகவான் தமது உடலை விரிவடையச் செய்து பகவான் விஷ்ணுவாக ஒரு பிரம்மாண்டமான உருவத்தை ஏற்றார். சுக்ராசார்யரின் அறிவுரைகளைக் கேட்டபின், பலி மகாராஜன் சிந்தனையில் ஆழ்ந்தார். மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன் இன்பம் ஆகிய கொள்கைகளைப் பாதுகாக்க வேண்டியது ஒரு குடும்பஸ்தனின் கடமை என்பதால், பிரம்மச்சாரிக்கு அளித்திருந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்குவது முறையல்ல என்று பலி மகாராஜன் நினைத்தார். ஒரு பிரம்மச்சாரியிடம் பொய் சொல்வதோ அல்லது அவருக்களித்த ஒரு வாக்குறுதியை மதிக்காமல் நடந்து கொள்வதோ ஒருபோதும் முறையல்ல. ஏனெனில் பொய் சொல்வது மிகப்பெரிய பாவமாகும். பொய் பேசும் பாவியொருவனின் பாரத்தை பூமித் தாயாலும் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், பொய...

பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல்

ஆதாரம்  :-  ஶ்ரீம த்   பாகவதம்   எட்டாம் காண்டம்   🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁   பாகம்  5   பகவான் வாமனதேவர் பலி மகாராஜனிடம் யாசித்தல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 இப்பத்தொன்பதாம் அத்தியாம், எப்படி பகவான் வாமனதேவர் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டார் என்பதையும், எப்படி பலி மகாராஜன் அவரது திட்டத்திற்கு சம்மதித்தார் என்பதையும், பகவான் வாமனதேவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதிலிருந்து பலி மகாராஜனை சுக்ராசார்யர் எப்படி தடுத்தார் என்பதையும் விவரிக்கிறது. வாமனதேவரை ஒரு பிராமண புத்திரரென்று எண்ணிய பலி மகாராஜன், அவர் விரும்பிய எதையும் கேட்கலாம் என்று அவரிடம் கூறினார். அப்போது பகவான் வாமனதேவர் இரண்யகசிபு மற்றும் இரண்யாக்ஷன் ஆகியோரின் வீரதீரச் செயல்களைப் புகழ்ந்து பேசினார். பலி மகாராஜன் பிறந்த குடும்பத்தை இவ்வாறு புகழ்ந்த பின், ராஜனிடம் அவர் மூன்றடி நிலத்தை யாசித்தார். இது மிகவும் அற்பமானதாகையால், இந்த நிலத்தை தானமாகக் கொடுக்க பலி மகாராஜன் ஒப்புக் கொண்டார். ஆனால் வாமனதேவர் தேவர்களின் நண்பரான விஷ்ணு என்பதைப் புரிந்துகொண்ட சுக்ராசார்யர், இந்த நிலத்தைக் கொடுக்க வேண்டாம் என்று பலி மகா...