Skip to main content

Posts

Showing posts with the label Mahabharata Stories /மஹாபாரதம் கதைகள் (Story )

தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும்

  தௌம்யரும் முத்தான மூன்று சீடர்களும் வழங்கியவர்: ஸந்தான கிருஷ்ண தாஸ் இன்றைய உலகில், யாரேனும் ஒருவரிடம் இடுப்பில் காவி, கழுத்தில் மாலை, நெற்றியில் குறி முதலிய ஆன்மீக சின்னம் இருந்தால் போதும், அந்த நபர் கபடதாரியாக இருந்தாலும், அவரை ஆன்மீக குருவாக ஏற்பதற்கு சமுதாயம் தயாராக உள்ளது. மறுபுறம், ஆன்மீக குருமார்களும் எவ்விதப் பயிற்சியோ பரிட்சையோ இல்லாமல் சீடர்களை ஏற்கின்றனர். இதுதான் இன்றைய நிதர்சனம். ஆனால் வேத இலக்கியங்களோ குரு-சீட இலக்கணங்களை வகுத்து நமக்கு வழிகாட்டியுள்ளது. ஆயோத தௌம்யர் என்னும் தலைசிறந்த குரு தமது சீடர்களை எவ்வாறு பரிசோதித்தார் என்பதை மஹாபாரதத்தின் ஆதி பர்வத்தில் (அத்தியாயம் 3) காண்கிறோம். மடையாய் கிடந்த சீடன் ஆயோத தௌம்யரின் ஆஷ்ரமம் அடர்ந்த அடவியில் அழகாக அமைந்திருந்தது; அங்கே அவருக்கு ஆருணி, உபமன்யு, வேதன் முதலிய முத்தான சீடர்கள் சேவை செய்து வந்தனர். ஒரு நாள் மாமுனிவர் தௌம்யர் ஆருணியை அழைத்து, வயலின் வாய்க்கால் உடைப்பை அடைத்துவிட்டு வரும்படி ஆணையிட்டார். ஆருணி வாடையின் வாட்டலுக்கு வருந்தாது வரப்பு வழியே விரைந்தபோது, வழக்கத்திற்கு மாறாக வாய்க்காலில் வழிந்தோடும் நீர்ப்பெ...

அலட்சியம் கூடாது

மஹாபாரத யுத்தத்திற்கு பின் யுதிஷ்டிர மகாராஜாவின் கேள்விக்கு அம்புபடுக்கையில் இருந்த பிதாமகர் பீஷ்மரால் சொல்லப்பட்ட ராஜ நீதி கதைகளில்  கீழ்காணும் கதையும் ஒன்று  ஒரு ஊரில்  வயல்களின் நடுவே ஆங்காங்கே குளங்கள் இருந்தது அதில் சிறிதும், பெரியதுமாக நிறைய மீன்கள் இருந்தன. அதில் மூன்று பெரிய மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக வாழ்ந்து வந்தது.   அவைகள்  எங்கு இருந்தாலும், என்ன செய்தாலும் ஒரே மாதிரி செய்து கொண்டு மிக்க நேசமாக அக்குளத்தில் வாழ்ந்தன. மற்ற மீன்களுக்கு அவைகளிடம் மிக்க மரியாதையும், அன்பும் இருந்தது. அந்த மீன்கள் ஒவ்வொன்றிற்கும்  ஒரு விசேஷ தன்மை, குணம் இருந்தது.  ஒன்றிற்கொன்று வித்தியாசமான குணமானாலும் அவைகளுக்குள் பிரச்சினை ஒன்றும் இல்லை. முதலாவது மீனின் பெயர் தூரதர்சி  அதாவது இதன் இயல்பு எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து முன் எச்சரிகையோடு தன்னை காப்பாற்றி கொள்ளும் குணமுடையது.   இரண்டாவது மீனின் பெயர் பிரத்யுன்மதி இதன் இயல்பு, ஆபத்தான சமயம் வரை காத்திருந்து , மிகவும் சிரமப்பட்டு தக்க உபாயம் தோன்றி பல கடினங்களுக்கு பின் தன்னைத்தானே காப்...

பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை

  பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யுதிஷ்டிர மஹராஜாவும் ஸ்வபஜா வால்மிகா என்ற ஸாதுவும்   ( இந்த கதையானது ஜைமினி ரிஷி எழுதிய மஹாபாரதத்தில் உள்ளதாகும்) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராஜஸுய யாகம் நிறைவடைந்த பிறகு மஹாராஜா யுதிஷ்டிரர் பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமான தானங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரிடம் எனது சேவையில் அனைத்து பிராமணர்களும் வைஷ்ணவர்களும் திருப்தியடைந்தனரா என்பதை எவ்வாறு நான் அறிந்து கொள்வது என்று வினவினார். அதற்கு கருணையுள்ள பகவான், அவருடைய சங்கை ஒரு இடத்தில் வைத்து பின் கூறினார். விருந்தினர் அனைவரும் திருப்தியடைந்தனர் என்றால் இந்த சங்கு தானாகவே முழங்கும் என்றார். மஹராஜா யுதிஷ்டிரர் எல்லா பிராமண மற்றும் வைஷ்ணவ விருந்தினர்களுக்கும் மிகுந்த அக்கறையுடன் சேவைகள் செய்தார். ஆனால் முடிவில் அந்த சங்கானது முழங்கவில்லை. இதனால் மன்னர் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை அறிய விரும்பி பகவான் கிருஷ்ணரின் உதவியை பணிவுடன் வேண்டினாார். அதற்கு பகவான், நகருக்கு அப்பால் ஸ்வபஜா வால்மிகா என்ற மிகவும் பணிவா...

“உண்மையில் யார் காரணம் ?”

  உண்மையில் யார் காரணம் ? மஹாபாரதம் / அனுஷாஸன-பர்வம், / அத்தியாயம் ஒன்று வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 மாஹாபாரத போரில் பெரும் உயிர்சேதத்திற்கு தானே காரணம் என்று மனம்வருந்திய  யுதிஷ்டிர மஹாராஜரின் கேள்விகளுக்கு , பீஷ்மர்  பிதாமகர் இங்கே ஒரு சிறிய கதையின் மூலக பதிலளிக்கிறார்:  “நீ கடவுளையும், கர்மாவையும், காலத்தையும் நம்பியிருக்கும்போது, எதற்காக நீ உன்னையே காரணகர்த்தாவாக நினைக்கின்றாய்? இது தொடர்பான கதை ஒன்றில் ம்ருத்யு (மரண புருஷர்), காலம் (கால புருஷர்), புத்திசாலி பெண்மணியான கௌதமி, வேடன் மற்றும் ஒரு பாம்பு, இவர்களிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறுகிறேன் கேள்” என்றார்.   ஒருகாலத்தில் கௌதமி என்ற ஒரு மூதாட்டி இருந்தாள், அவள் பொறுமை மற்றும் மனஅமைதியின் சிகரமாக திகழ்ந்தாள். ஒருநாள் தனது மகன் பாம்பு கடித்து இறந்திருப்பதைக் கண்டாள். அர்ஜுனகா என்ற கோபக்கார வேடன் பாம்பை கயிற்றினால் கட்டி எடுத்துவந்து கௌதமியிடம் காண்பித்தான். அவன் அவளிடம், “மதிப்பிற்குரிய பெண்மணியே, இந்த கொடும் நாகம் தான் உனது மகனை கொன்றுள்ளது. இந்த பாவியை எவ்வாறு அழிப்பது என்று உடன...

வஞ்சகன்—கண்ணனா ? கர்ணனா?

வஞ்சகன்—கண்ணனா ? கர்ணனா? திரு. ஸ்ரீ கிரிதாரி தாஸ் கர்ணன்–மஹாபாரதத்தின் விசித்திரமான கதாபாத் திரங்களில் ஒருவன். ஒருபுறம் தனது கவச குண்டலத்தையும் தானமளிக்கும் பெருஉள்ளம், மறுபுறம் குலப் பெண்மணியை சபையில் அவமானப்படுத்தும் சிறுஉள்ளம். ஒருபக்கம் நண்பனுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கின்றது. மொத்தத்தில், கர்ணன் முரண்பாடுகளில் சிக்கிய ஒரு கதாபாத்திரம். கர்ணன்–நல்லவனா, கெட்டவனா என்பது பலருக்கும் புரியாத புதிர். நற்குணம் படைத்தவன், ஆனால் தீயோரின் சகவாசத்தினால் அதர்மத்திற்கு துணை நின்று அழிந்து போனவன் என்பதே பெரும்பாலானோரின் கருத்து. இருப்பினும், சுமார் 50 வருடங்களுக்கு முன்பு (1964இல்) தமிழில் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படமும், 1977இல் திரு. என்.டி. இராமராவ் அவர்களின் நடிப்பில் வெளிவந்த தான வீர சூர கர்ணன் திரைப்படமும், வெறும் திரைப்படங்களாக மட்டும் வந்து செல்லாமல் மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி, கர்...