Skip to main content

Posts

Showing posts with the label Prabhupada told Stories/ ஶ்ரீல பிரபுபாதர் அருளிய கதை

மொட்டைத் தலையும் வெறும் காலும்

 .               ஒரு மாலை வேளையில், இலண்டனில் உள்ள பக்திவேதாந்த பண்ணையில், ஸ்ரீல பிரபுபாதர் சீடர்கள் சிலருடனும் விருந்தினர்களுடனும் தமது அறையில் அமர்ந்திருந்தார், ஸ்ரீல பிரபுபாதரை பேட்டி காண வந்த ஒரு பெண் நிருபரும் அங்கே இருந்தார். மிதமான கோடைகாலமாக இருந்தபோதிலும், அந்த பெண் நிருபர் குட்டைப் பாவாடையே அணிந்திருந்தார். ஹரே கிருஷ்ண இயக்கத்தைப் பற்றி அவள் எழுப்பிய சில வினாக்களிலிருந்து. அவளுடைய சந்தேகமும் குறை காணும் மனோபாவமும் வெளிப்பட்டன. இருப்பினும், ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் போலவே அவளுடைய வினாக்களுக்கு பொறுமையாகவும் அருமையாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அதனால் நம்பிக்கையிழந்த அவள் சவால் விடும் மனோபாவத்தில், "உங்களுடைய ஆட்கள் ஏன் மொட்டையடிக்கின்றனர்?' என வழக்கமான வினாவினை எழுப்பினாள். உடனே, பிரபுபாதர், "நீங்கள் ஏன் கால்களை ஆடையால் மறைத்துக்கொள்ளாமல், கால்கள் வெளியே தெரியும்படி ஆடையணிகிறீர்கள்?" என்று சற்று கோபமாக வினவினார். அவள் வாயே திறக்கவில்லை. அதன் பிறகு. ஸ்ரீல பிரபுபாதர். "கால்கள் வெது வெதுப்பாகவும், தலை குளுர்ச்சியுடனும் இருப்பதே சி...

கடவுளை மறந்தால்

  கடவுளை மறந்தால் முழுமுதற் கடவுளை மறந்தால் என்ன நடக்கும் என்பதை விளக்கும் சிறந்த கதை ஒன்று உள்ளது. ஒரு சமயம், ஓர் எலிக்கு ஒரு பூனையினால் தொல்லை ஏற்பட்டது. ஆகவே, அந்த எலி இறைத்தன்மையை உணரச் செய்யும் ஆற்றல் படைத்த ஒரு சாதுவிடம் சென்று, “அன்புள்ள ஐயா, நான் மிகுந்த கவலையில் உள்ளேன்,” என்று கூறியது. “என்ன கஷ்டம்?” எலி கூறியது, “என்னை ஒரு பூனை எப்போதும் துரத்துவதால், எனக்கு மன அமைதி இல்லை.” “என்ன வேண்டும் உனக்கு?” “தயவுசெய்து என்னை பூனையாக மாற்றிவிடுங்கள்.” “சரி. பூனையாக மாறுவாயாக!” சாதுவின் வாக்கினால் அந்த எலி உடனடியாக பூனையாக மாறியது. ஆயினும், சில நாள்களுக்குப் பிறகு அந்தப் பூனை சாதுவிடம் வந்து கூறியது, “அன்புள்ள ஐயா, மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.” “என்ன கவலை?” “நாய்கள் என்னைத் துரத்துகின்றன.” “என்ன வேண்டும் உனக்கு?” “என்னை ஒரு நாயாக மாற்றிவிடுங்கள்.” “சரி. நாயாக மாறுவாயாக!” பூனை நாயாக மாறியது. சில நாள்களுக்குப் பிறகு அந்த நாய் மீண்டும் அவரிடம் வந்து கூறியது, “மீண்டும் நான் கவலையில் உள்ளேன்.” “என்ன கவலை?” “நரிகள் என்னைத் துரத்துகின்றன.” “என்ன வேண்டும் உனக்கு?” “என்னை நரியாக மாற்று...

ஒரு பக்தர் தேவையில்லாமல் வைஷ்ணவ உடைகளையோ, துளசி மணிமாலை போன்றவற்றை அணிவதை விட்டுவிடக் கூடாது.

  ஶ்ரீல பிரபுபாதர் அருளிய கதைகள் ஒரு பக்தர் தேவையில்லாமல் வைஷ்ணவ உடைகளையோ, துளசி மணிமாலை போன்றவற்றை அணிவதை விட்டுவிடக் கூடாது. மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் ஒரு காலத்தில் இந்தியாவில் உள்ள தொழிற்சாலையொன்றில் நிறைய இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வேலை செய்தனர். அதிலும் பெரும்பாலானோர் வைஷ்ணவர்களாவர். அங்கு வைஷ்ணவர்களுக்கு நெற்றியில் திலகம் அணியவும், துளசி மாலை மற்றும் பிற வைஷ்ணவ அடையாள சாதனங்களை உபயோகிக்க சுதந்திரம் இருந்தது. சிறிது காலத்திற்குப் பிறகு தொழிற்சாலை ஒரு புதிய நிர்வாகத்தின் கைக்கு மாறியது. அதன் உரிமையாளர்கொரு முகமதியர் (முஸ்லீம்) ஆவார். அவர் அங்கு வேலை பார்ப்பவர்களிடம், வைஷ்ணவ திலகம் அணிந்து கொண்டு வேலைக்கு வருவதற்கு அனுமதி இல்லை என்றார். பெரும்பான ஊழியர்கள் அதற்குக் கீழ்படிந்து நிர்வாகி அறிவித்த தேதியிலிருந்து திலகம் அணியாமல் வேலைக்கு வந்தனர். ஆனால் ஒரே ஒரு ஊழியர் மட்டும் ஆனது ஆகட்டும் அனைத்தையும் பகவான் கிருஷ்ணர் பார்த்துக் கொள்வார் என்று அவரையே முழுமையாகச் சரணடைந்து தைரியமாக அழகான திலகத்தை நெற்றியில் தரித்துக் கொண்டு வேலைக்கு வந்தார். மறுநாள் காலையில் அனைத்து ...