கீதா மஹாத்மியம் பகவத் கீதை. பதிமூன்றாம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். பகவத் கீதை. பதிமூன்றாம் அத்தியாயத்தின் மஹிமை *************************** சிவபெருமான், பார்வதி தேவியிடம், " எந்தன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத் கீதையின் பதிமூன்றாம் அத்தியாயத்தின் எல்லையற்ற பெருமைகளை கேட்டு மகிழ்ச்சியடைவாயாக" என்று கூறினார். தெற்கே, துங்கபத்திரா நதிக்கரையில் ஹரிஹரப்பூர் என்ற அழகிய நகரில் சிவபெருமான் "ஹரிஹரா" என்ற பெயரால் வழிபடப்பட்டார். அவரை வழிபடும் எவரும் நன்மைகளை பெறுவர். ஹரிஹரப்பூரில் ஹரி தீக்ஷித் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் வேதங்களை கற்று தேர்ந்தவராக இருந்த போதும் எளிமையாக தவ வாழ்வு வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவியை அனைவரும் "துராச்சாரி" என்று அழைப்பர். இதற்கு காரணம் அவளுடைய தகாத செயல்களாகும். தன் கணவரை எப்பொழுதும் குறை கூறிக்கொண்டே இருப்பதும், அவருக்கு நல்ல மனைவியாக நடந்து கொள்ளாததும், கணவர...