Skip to main content

Posts

Showing posts with the label Lord Balaram Lila / ஶ்ரீ பலராம லீலைகள் (story)

துவித மனிதக் குரங்கின் முக்தி

  பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கொன்ற நரகாசுரன் என்ற அசுரனுக்கு துவிதன் என்றொரு வானர நண்பன் இருந்தான் . தன் நண்பனின் மரணத்துக்குப் பழிவாங்க விரும்பிய துவிதன் , இடையர்களின் வீடுகளுக்குத் தீ மூட்டினான் . பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆனர்த்த தேசத்தை நாசப்படுத்தினான் . மேலும் தன் வலிமைமிக்க கரங்களால் சமுத்திர நீரைக் கடைந்து கொந்தளிக்கச் செய்து கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தினான் . அந்த அயோக்கியன் பிறகு மாமுனிவர்களின் ஆசிரமங்களிலுள்ள மரங்களை நாசப்படுத்தியதுடன் , அவர்களுடைய வேள்வித் தீயில் மலஜலமும் கழித்தான் . அவன் ஆண் பெண்களை கடத்திச் சென்று மலைக் குகைகளில் அடைத்து வைத்தான் . முழு நிலப்பரப்பையும் இவ்வாறு நாசமாக்கி , கௌரவமான குடும்பங்களைச் சேர்ந்த பல இள மங்கைகளைக் கற்பழித்தபின் , துவிதன் ரைவதக மலைப்பக்கம் வந்தான் . அங்கு பகவான் பலராமர் அழகு மங்கையிரின் கூட்டத்திற்கு கிடையயில் களிப்புற்றிருப்பதைக் கண்டான் . வாருணி மது வருத்தி போதையேறிவர் போல் காணப்பட்ட பகவான் பலதேவரை அலட்சியப்படுத்தி , அவர் முன்னிலையிலே...

பகவான் ஶ்ரீ பலராமர்

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,  பகவான்  கிருஷ்ணர், பூமியில் அவதரித்தார். அவரோடு, அவரது சகோதரராக பலராமர் அவதரித்தார். யமுனை நதிக்கரையிலிருந்த விருந்தாவனம் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள். இரு சகோதரர்களும் எல்லையில்லா அழகை பெற்றிருந்தனர். கிருஷ்ணர், கார்மேக வண்ணத்தோடும் தாமரை கண்களோடும், புல்லாங்குழல் கொண்டு காணப்பட்டார். பலராமர் வெள்ளை நிறத்தோடு, தாமரை கண்களோடு, கருநிற கூந்தலோடு கலப்பையோடு காணப்பட்டார். கிருஷ்ணர் எப்போதும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார். பலராமர் எப்போதும் நீல நிற ஆடைகள் அணிந்திருந்தார்.  அவர்களுடைய தந்தையான நந்த மஹாராஜர் மற்றும் தாய் யசோதா தேவிக்கு சொந்தமாக ஒன்பது லட்சம் பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து வரும் பாலை கொண்டு, தயிர், மோர், வெண்ணை மற்றும் நெய் கிடைத்தது. மேலும் எருதுகள் விவசாயம் மற்றும் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. விருந்தாவன வாசிகளுக்கு போதுமான அளவு பழங்கள் மற்றும் தானியங்கள் கொடுத்தது போக மீதமிருந்தால் அவர்கள் அருகிலிருக்கும் கிராமத்து மக்களோடு பண்டமாற்று முறைப்படி, அதிக விளைச்சலை கொடுத்து, அதற்கு நிகரான ஆபரணங்கள் மற்று...