ஏகாதசி அன்று நாம் ஏன் தானியங்கள் உண்ணக்கூடாது? பத்ம புராணம்: பூயோ பூயோ திர்த வாணி ச்ரயதாம் சயத ஜன ந போக்தவ்யம் ந போக்தவ்யம் ஹரேர் தினே "ஓ! மனிதர்களே! தயவு செய்து கேளுங்கள். நான் மீண்டும் மீண்டும் உறுதியோடு கூறுகிறேன், பகவான் ஹரிக்கு உகந்த நாட்களில் (ஏகாதசி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி) அன்று தயவு செய்து தானியங்கள் சாப்பிடாதீர்கள். யாரேனும் வற்புறுத்தினாலும் கூட, மறந்தும் ஒரு தானியத்தை சாப்பிட்டுவிடாதீர்கள். ஏன் ஏகாதசி அன்று தானியங்கள் சாப்பிடக்கூடாது என்று ப்ரஹன் நாரதிய புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது: யாணி காணி சபாபானி பிரம்மா ஹத்யாதி காணி சா அண்ணம் அஸ்ரித்ய தியதந்தி ஸம்ப்ராப்தே ஹரி வாஸரே "பிராமணரை கொன்ற பாவம் உட்பட, அணைத்து பாவங்களும் ஏகாதசி மற்றும் பகவான் ஹரிக்கு உகந்த நாட்கள் அன்று தானியங்களில் இருக்கும். யாரொருவர் இந்த நாட்களில் தானியங்களை உட்கொள்கிறாரோ, அவருக்குக்குள் இந்த பாவங்கள் போய்சேரும். ஹரி பக்தி விலாசம்: பிரமச்சாரி க்ரிஹஸ்தோ வா வானப்ரஸ்தோ அதாவ யதி ஏகாதஸ்யாம் ஹி புத்தே கோ மாம்சம் ஏவ ஹி ஒருவன் பிரமச்சாரி, க்ருஹஸ்தன், வானப்ரஸ்தம் அல்லது சந்நியாசி - என வாழ்வின் எந்த ஆசிரமத்த...