ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 7 / அத்தியாயம் 9 / பதம் 8-50 ************************************************************************* பதம் 8 ஸ்ரீ - ப்ரஹ்ராத உவாச ப்ரஹ்மாதய : ஸுர - கணா முனயோ ‘ த ஸித்தா : ஸத்வைகதான - கதயோ வசஸாம் ப்ரவாஹை : நாராதிதும் புரு - குணைர் அதுனாபி பிப்ரு : கிம் தோஷ்டும் அர்ஹதி ஸ மே ஹரிர் உக்ர - ஜாதே : மொழிபெயர்ப்பு பிரகலாத மகாராஜன் பின்வருமாறு துதித்தார் : அசுரர்களின் குடும்பத்தில் பிறந்த நான் , பரமபுருஷரை திருப்திப்படுத்தக்கூடிய தகுந்த ஸ்தோத்திரங்களைச் செய்வது எவ்வாறு சாத்தியமாகும் ? பிரம்மா முதலான அனைத்து தேவர்களும் , அனைத்து முனிவர்களும் சத்வ குணத்தில் இருப்பதால் , தகுதி மிக்கவர்களான இருப்பினும் , அவர்களுடைய வார்த்தைப் பிரவாகங்களால் இக்கணம் வரை அவர்களால் பகவானைத் திருப்திப்படுத்த இயலவில்லை . அப்படியிருக்க நான் எம்மாத்திரம் ? எனக்குச் சிறிதளவு தகுதிகூட இல்லை . பதம் 9 மன்யே தனாபிஜன - ரூப தப :- ஸ்ருதௌஜஸ் - தேஜ :- ப்ரபாவ - பல - பௌருஷ - புதிதி - யோகா : நாராதனாய ஹி பவந்தி பரஸ்ய பும...