Skip to main content

Posts

Showing posts with the label Śrīla Vṛndāvana dāsa Ṭhākura / ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்(Articles)

ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர்

  ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 சைதன்ய மஹாபிரபுவின் மீதி உணவை நாராயணி நித்தியமாக உண்கிறாள். ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் அவளது கருவிலிருந்து பிறந்தவர். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் எல்லா சகாக்களையும் அவர்களது முந்தைய தோற்றத்தினையும் விவரிக்கக்கூடிய கவி கர்ணபூரரால் எழுதப்பட்ட கௌரக ணோத்தேஷதீபிகா என்னும் நூலின் 43ஆவது ஸ்லோகத்தில், நாராயணியைக் குறித்து பின்வரும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது: அம்பி காயா: ஸ்வஸா யாஸீன் நாம்னா ஸ்ரீல- கிலிம்பி கா  க்ருஷ்ணோச்சி ஷ்டம் ப்ரபுஞ்ஜானா ஸேயம் நாராயணீ மதா பகவான் கிருஷ்ணர் குழந்தையாக இருந்தபோது, அவர் அம்பிகை என்னும் பெண்ணால் பராமரிக்கப்பட்டார், அவளது தங்கையின் பெயர் கிளிம்பிகை. சைதன்ய மஹாபிரபுவின் அவதார காலத்தில், அதே கிளிம்பிகை, ஸ்ரீவாஸ தாகூருடைய சகோதரரின் மகளாக நாராயணி என்ற பெயரில் தோன்றினாள்; அவள் பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் மீதம் வைக்கப்பட்ட உணவினை உண்பது வழக்கம். பிற்காலத்தில் அவள் பெரியவளாகி திருமணம் செய்த பின்னர், அவளது கருவிலிருந்து ஸ்ரீல விருந்தாவன தாஸ தாகூர் பிறந்தார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தரொருவர் பகவானுக்கு அவர் செய்ய...