Skip to main content

Posts

Showing posts with the label 16) பகவத் கீதை அத்தியாயம் - 16

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -16

  பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -16 தெய்வீக மற்றும் அசுர இயல்புகள் வழங்கியவர் : ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினைந்தாம் அத்தியாயத்தின் சுருக்கம் ஜடவுலகத்தினை தலைகீழான ஓர் அரச மரத்துடன் ஒப்பிட்டு கிருஷ்ணர் பதினைந்தாம் அத்தியாயத்தினைத் தொடக்கினார் . அந்த அரச மரத்தின் ஆதியைக் காண முடியாது என்றும் , பற்றின்மையைக் கொண்டு அதனை வெட்டி வீழ்த்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார் . அவ்வாறு வீழ்த்துவதால் அடையப்படும் கிருஷ்ணரின் உயர்ந்த லோகம் , சூரியனாலோ சந்திரனாலோ நெருப்பினாலோ ஒளியூட்டப்படுவதில்லை . அங்கு வசிப்பதற்குப் பதிலாக இந்த ஜடவுலக வாழ்வில் துன்பப்படும் கிருஷ்ணரின் நித்திய அம்சங்களான ஜீவன்கள் , ஓர் உடலை விட்டு மற்ற உடலை அடையும்போது , முந்தைய உடலின் உணர்வுகளைத் தாங்கிச்   செல்கின்றன . அவர்களின் உடல்களை கிருஷ்ணரே பராமரிக்கின்றார் , அவரே வேதங்களை அறிந்தவராகவும்   உள்ளார் . எல்லா உயிர்வாழிகளுக்கும் அப்பாற்பட்டவராகத் திகழும் கிருஷ்ணரை அறிந்தவன் அனைத்தையும் அறிந்தவனாகிறான் . அவன் அவரது தூய பக்தியி...