பலராம் பூர்ணிமா மற்றும் ரக்ஷாபந்தன் கொண்டாட்டம் ******************************* இன்று ஶ்ரீதாம் மாயாபூரில். பலராம் பூர்ணிமா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அதில் பக்தர்கள் ராஜாபூரில் உள்ள ஜெகன்நாதருக்கும் , பலதேவருக்கு ராக்கி கயிற்றை பரிசாக அர்ப்பணித்தார்கள் .அதை பூசாரி சுபத்ரா தேவியிடம் கொடுத்து ஜெகன்நாதர் மற்றும் பலதேவர் கையில் கட்டினார். பகவான் கையில் உள்ள கயிற்றை பிரசாதமாக திருப்பி கட்டியதும்.பக்தர்களின் மனோபாவம் மற்றும் ஆனந்தத்தை காணமுடிந்தது. ரக்ஷாபந்தன் ******************* சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் பூர்ணிமா (முழு நிலவு) நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் ...