Skip to main content

Posts

Showing posts with the label Faith / நம்பிக்கை (Story)

நம்பிக்கை மற்றும், உற்சாகத்தின் பலம்

ஒரு ராஜாவுக்கு  பல யானைகள் இருந்தன, ஆனால் ஒரு யானை மிகவும்  சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது.  பல போர்களில், போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும். எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது . நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை. எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது. ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது. ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது . அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது.  ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை. அந்த வழியே வந்த கவுதம புத்தர் இந்த சம்பவத...

ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்

  * ஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும் * ******************************** நாத்திகன் ஓருவன் மேடையில் பிரசங்கிக்கிறான். "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக்கொண்ட கட்டுக்கதைகள்" என்று வாய் ஜால  திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக " கடவுளுமில்லை, கத்திரிக்காயுமில்லை, எல்லாம் பித்தலாட்டம்" எனச் சொல்லி முடித்து "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்" என்றும் அழைத்தான். அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த ஒருவன்  மேடைமீது ஏறினான். தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, தோலை மெதுவாக உரித்தான். "கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே" எனக் கோபங்கொண்டான் நாஸ்திகன். பழத்தை உரித்தவன் சுழை சுழையாகத் தின்று கொண்டே பொறு, பொறு தின்று முடித்துவிட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்" என்று சொல்லியவாறு ரசித்துத் தின்றுகொண்டிருந்தான்.தின்று முடித்த...

கடவுள் நம்பிக்கை

  கடவுள் நம்பிக்கை ராஜேஷ் முடிவெட்டிக் கொள்ள வழக்கமாகச் செல்லும் கடைக்குச் சென்றான். முடிதிருத்துபவர் அவனுக்கு நெருக்கமான நண்பர். இருவரும் பல விஷயங்கள் பற்றி மகிழ்ச்சியாக உரையாடுவர். அன்றும் அப்படியே பலவிஷயங்கள் பற்றி பேசினர். இடையில் கடவுளைப் பற்றிப் பேச்சு வந்தது. முடிதிருத்துபவர், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நான் நம்ப மாட்டேன்! என்றார். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? என்று கேட்டான் ராஜேஷ். காரணம் மிகச் சுலபமானது. தெருவில் போய்ப்பாருங்கள். கடவுள் இருந்தால் நோயால் வாடுபவர்கள் இருப்பார்களா? கடவுள் இருந்தால் கைவிடப்பட்ட குழந்தைகள் தெருவில் அலையுமா? கடவுள் இருந்தால் துன்பமும், வலியும் இராது. இதையெல்லாம் அனுமதிக்கும் கடவுள் நிச்சயம் இருப்பார் என்று நான் நம்பவில்லை, என்றார் முடிதிருத்துபவர். ராஜேஷ் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. வீணாக விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்று மவுனமானார். முடிதிருத்தும் வேலைமுடிந்து, ராஜேஷ் வெளியே போனார். அவர் போன சற்று நேரத்தில், வீதியில் நீண்ட தாடியும் அடர்ந்த முடியுமாய், ஒரு ஆள் நிற்பதை கடைக்காரர் பார்த்தார். அந்த நபரைப் பார்த்தால், மு...