Skip to main content

Posts

Showing posts with the label Sri Gopal Champu / ஸ்ரீ கோபால சம்பு (Story)

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாடுகளை மேய்க்கும் லீலை

பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மாடுகளை மேய்க்கும் லீலை ஆதாரம் :- ஸ்ரீ கோபால சம்பு      ஸ்ரீ நந்தர் மாடு மேய்க்க செல்லும் போது ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவருடன் செல்வர், காட்டில் நண்பர்களுடன் நாற்புறமும் சுற்றி பசுக்களிடம் விளையாடிய களைப்பில் ஸ்ரீ நந்தரின் மடியில் வந்து அமர்வார்கள், பின்னர் காட்டின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் கேட்டு அறிந்து கொள்வார்கள் அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர்கள் பேரின்பத்தை உணர்வார்கள். இதற்கு மேல் போகக்கூடாது என்று எச்சரித்தாலும், தடுத்தாலும், இதற்கு மேல் போகமாட்டேன் என்று கம்பீரமாகக் கூறியபடி இரண்டு, நான்கு ஆறு பசுக்களைக் கூட ஒன்றாக வசப்படுத்தி சூழ்ந்து விளையாடுவார்கள். பிறகு பரஸ்பரம் ஓடி பசுக்களை மேய்த்து, முரட்டு பசு காளைகளின் கொம்பைப் பற்றி அவற்றைத் தடுப்பார்கள். சிலசமயம் தனித்தனியே ஐந்தைந்து பசுக்களைக் கூட வசப்படுத்தி விடுவர். இப்படியே சில நாட்கள் சென்றது.      ஒரு நாள் நந்த மஹராஜா வனம் செல்ல புறப்பட்டு கொண்டிருந்த சமயத்தில் வ்ரஜேஸ்வரி அன்போடு நந்தரைக் குறை கூறியவாறு, "இவ்விரு பிள்ளைகள் உங்களுடன் காட்டிற்குச் சென்று உங்கள...