ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 14 / பதம் 1-40 ************************************************************************* பதம் 10.14.1 ஸ்ரீ-ப்ரஹ்மோவாச நௌமீட்ய தே (அ)ப்ர-வபுஷே தடித்-அம்பராய குஞ்ஜாவதம்ஸ-பிரபிச்ச-லஸன்-முகாய வன்ய-ஸ்ரஜே கவல-வேத்ர-விஷண-வேணு- லக்ஷ்ம-ஸ்ரீயே ம்ருது-பதே பஸுபாங்கஜாய மொழிபெயர்ப்பு பிரம்மதேவன் கூறினார்: போற்றுதற்குரிய பகவானே! நீரே முழுமுதற் கடவுளும், வணங்குதற்குரிய தெய்வமும் ஆவீர். அதனால் உம்மை மகிழ்விப்பதற்காக எனது பணிவான வந்தனங்களையும், பிரார்த்தனைகளையும் உனக்கு நான் அர்ப்பணிக்கின்றேன். ஓ, ஆயர் குலத்தலைவனின் மைந்தனே, வானில் தவழும் மேகத்தினைப் போல் உமது உன்னத உடல் கருநீல வண்ணமுடையதாக இருக்கின்றது. நீர் அணிந்திருக்கும் ஆடையோ மின்னலைப் போன்று ஒளி வீசுகின்றது. உமது முகத்தின் எழில், உமது செவிகளின் தொங்கும் குன்றி மணிக் குண்டலங்களினாலும், தலையில் சூடியிருக்கும் மயிலிறகினாலும் மேலும் அதிகரிக்கின்றது. வனத்திலுள்ள மலர்களினாலான மாலையினை அணிந்து கொண்டு, நிலை மேய்க்கும் கோலினையும், ஊதும் கொம்பு மற்றும் புல்லாங்குழலினையும், ஒரு கவளம் உண...