Skip to main content

Posts

Showing posts with the label Ganga Story / கங்கை பூமிக்கு வந்த வரலாறு:

கங்கை நதியின் சரித்திரம்

  ரோஹிதரின் மகன் ஹரிதன். ஹரிதரின் மகன் சம்பன். இவர் சம்பாபுரி எனும் நகரத்தை நிர்மாணித்தார். சம்பனின் மகன் சுதேவன். சுதேவனின் மகன் விஜயன். விஜயனின் மகன் பருகன். பருகனின் மகன் விருகன். விருகனின் மகனான பாஹுகன் அவரது எதிரிகளால் மிகவும் தொல்லைப்படுத்தப்பட்டார். எனவே அவர் வீட்டைத் துறந்து மனவைியுடன் காடு சென்றார். அவர் அங்கு இறந்துபோனதும் அவருடைய மனைவி உடன்கட்டையேற விரும்பினாள். ஆனால் அவள் கர்ப்பவதியாக இருந்ததை அறிந்த ஓளரவ ரிஷி அவளைத் தடுத்துவிட்டார். இவளது சக்களத்திகள் இவளுக்கு உணவுடன் விஷம் கலந்து கொடுத்துவிட்டனர். ஆயினும் அவளுடைய மகன் விஷத்துடனேயே பிறந்தான். எனவே அம்மகன் சகரன் என்று பெயர் சூட்டப்பட்டான். (ஸ என்றால் “உடன்”, கர என்றால் “விஷம்”)   சகர மகாராஜன், தன் ஆன்மீக குருவான ஓளரவரின் உத்தரவுப்படி,   யவனர், சகர், ஹைஹயர் மற்றும் பர்பரஸ் முதலான பல ஜாதிகளை சீர்படுத்தினார். பிறகு மீண்டும் ஓளரவரின் உத்தரவுப்படி, அரசர் அஸ்வமேத யாகங்களைச் செய்தார். ஆனால் யாகக் குதிரையை இந்திரன் அபகரித்துச் சென்றுவிட்டார். சகர மகாராஜனுக்கு சுமதி மற்றும் கேசினி என்ற இரு மனைவிகள் இருந்தனர். குதிரையைத...

கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா?

கங்கையில் நீராடினால் பாவம் போய்விடுமா? வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 கைலாயத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி தேவிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது அதை கைலைநாதனான சிவனிடம் கேட்க ஆரம்பித்தார். அதாவது, மக்கள் கங்கையில் நீராடினால் தங்களது பாவம் போய்விடும் என்று நீராடுகிறார்களே, அவர்களில் எல்லொரது பாவமும் போய்விடுமா? என்பது தான் அந்த கேள்வி. அதற்கு சிவபெருமானோ அதற்கான பதிலை ஒரு சிறு நாடகமாக நடத்தி காட்ட எண்ணி பார்வதி தேவி என்ன செய்ய வேண்டும் என்று கூறினார். அதன்படி சிவபெருமான் வயதான ரிஷி போலவும், பார்வதி தேவி ரிஷி பத்தினியாகவும் மாறினார்கள். கங்கையில் தீர்த்தமாடி வரும் வழியில் சிறு பள்ளம் தோன்றச் செய்து சிவபெருமான் அதில் விழ்ந்து தத்தளித்தபடியும், பார்வதி தேவி பள்ளத்தின் அருகே நின்று தனது கணவரை காப்பாற்ற வேண்டும் என்று கூக்குரலிட்டு கத்தியபடி இருந்தார். கங்கையில் குளித்து விட்டு வந்த பலர் பள்ளத்தில் கிடந்த சிவபெருமானை வெளியே தூக்க வந்தபோது பார்வதி தேவி தனது கணவர் ஒரு உத்தமமான  ரிஷி என்றும் அவரை பாவம் செய்தவர் தொட்டால் மறுகணமே சாம்பல...