Skip to main content

Posts

Showing posts with the label 19.Prayers of Nagapatni / நாக பத்தினிகளின் பிரார்த்தனை

நாக பத்தினிகளின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 16 / பதம் 33-53 பதம் 33 நாக - பத்ன்ய ஊசு : ந்யாய்யோ ஹி தண்ட : க்ருத - கில்பிஷே ( அ ) ஸ்மிம்ஸ் தவாவதார : கல - நிக்ரஹாய ரிபோ : ஸுதானாம் அபி துல்ய - த்ருஷ்டிர் தத்ஸே தமம் பலம் ஏவானுஸம்ஸன் மொழிபெயர்ப்பு காளிங்கனின் மனைவியர் கூறினர் : இக்குற்றவாளிக்குத் தாங்கள் அளித்த தண்டனை நியாயமானதே . துஷ்டர்களையும் , கொடியவர்களையும் அழிப்பதற்கே நீர் இப்பூலகில் அவதரித்திருக்கின்றீர் . உமது பகைவர்களிடத்தும் , உமது சொந்த புதல்வர்களிடத்தும் நீர் சமபார்வை உடையவர் . வாழ்கின்ற ஓர் உயிருக்கு நீர் தண்டனை அளிக்கின்றீர் என்றால் அது அவனது நன்மைக்கே என்பதை நீர் நன்கறிவீர் .   பதம் 34 அனுக்ரஹோ ( அ ) யம் பவத : க்ருதோ ஹி நோ தண்டோ ( அ ) ஸதாம் தே கலு கல்மஷாபஹ : யத் தந்தஸூகத்வம் அமுஷ்ய தேஹின : க்ரதோ ( அ ) பி தே ( அ ) னுக்ரஹ ஏவ ஸம்மத : மொழிபெயர்ப்பு நீர் துஷ்டர்களுக்கு அளிக்கும் தண்டனையின் மூலம் அவர்களது மாசினை அகற்றுகின்றீர் , அதனால் இப்போது நீர் செய்திருப்பது எங்களுக்கு உண...