Skip to main content

Posts

Showing posts with the label 13) பகவத் கீதை அத்தியாயம் - 13

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -13

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -13 இயற்கையும் அனுபவிப்பவனும் உணர்வும் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பன்னிரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம் பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர், அருவ பிரம்மனை வழிபடுபவர்–இருவரில் யார் சிறந்தவர்? என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் பன்னிரண்டாம் அத்தியாயம் தொடங்கியது. தனது தனிப்பட்ட உருவத்தை வழிபடுவதே உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தி, பரம்பொருளின் அருவத் தன்மையை வழிபடுவோரின் பாதை துன்பங்கள் நிறைந்தது என்பதையும் ஆணித்தரமாக கிருஷ்ணர் எடுத்துரைத்தார். மேலும், தனது பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளோரை ஸம்ஸாரக் கடலிலிருந்து விடுவிக்கும் பொறுப்பை தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். தூய பக்தியில் நிலைபெற இயலாதோர் ஸாதன பக்தியைப் பயிற்சி செய்யலாம் என்றும், அதைச் செய்யவும் இயலாதோர் கர்மம், ஞானம், யோகம் போன்றவற்றில் ஈடுபடலாம் என்றும் கூறிய கிருஷ்ணர், தனது பக்தனின் உயரிய குணங்களை எடுத்துரைத்து பக்தனே தனக்கு பிரியமானவன் என்று நிலைநாட்டினார். பன்னிரண்டாம் அத்தியாயத்திற்கும் பதிமூன்றாம் அத்தியாயத்திற்கும் இடையிலான தொடர்பு தனது பக்தர்களைத் தானே விடுவிப்பதாக கி...