Skip to main content

Posts

Showing posts with the label 02.Prayers by Arjuna / அர்ஜுனனின் பிரார்த்தனை

அர்ஜுனனின் பிரார்த்தனை

  ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம்  7 / பதம் 22- 25 ************************************************************************* பதம் 22 அர்ஜுன உவாச க்ருஷ்ண க்ருஷ்ண மஹா - பாஹோ பக்தானாம் அபயங்கர த்வம் ஏகோ தஹ்யமானானம் அபவர்கோ ’ ஸி ஸம்ஸருதே : மொழிபெயர்ப்பு அர்ஜுனன் கூறினார் : எம்பெருமானே ஸ்ரீ கிருஷ்ணா , தாங்கள் சர்வ வல்லமையுடைய பரம புருஷ பகவானாவீர் . தங்களுடைய பல்வேறு சக்திகளுக்கு எல்லையே இல்லை . ஆகவே தாங்கள் ஒருவர்தான் உங்களுடைய பக்தர்களின் இதயங்களுக்கு அபயமளிக்கும் திறமை பெற்றவராவீர் . பௌதிக துன்பமெனும் தீயில் கருகிக் கொண்டிருக்கும் அனைவரும் உங்களிடம் மட்டுமே முக்திக்கான வழியைக் காணமுடியும் .   பதம் 23 த்வம் ஆத்ய : புருஷ : ஸாக்ஷாத் ஈஸ்வர : ப்ருக்ருதே : பர : மாயாம் வ்யுதஸ்ய சிச் - சக்த்யா கைவல்யே ஸ்தித ஆத்மனி   மொழிபெயர்ப்பு தாங்களே மூல முழுமுதற் கடவுளாவீர் . தாங்கள் சிருஷ்டி முழுவதிலும் விரிவடைந்திருப்பவரும் , பௌதிக சக்திக்கு மேற்பட்டவருமாவீர் . உங்களுடைய ஆன்மீக சக்தியின் பல...