கீதா மஹாத்மியம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஶ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை எட்டாம் அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 8 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, ஸ்ரீமத் பகவத்கீதையின் எட்டாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி இப்போது கேட்டு ஆனந்தம் அடைவாயாக". தெற்கே, அமர்த்கபூர் என்ற ஊரில், பவஷர்மா என்ற பிராமணன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு விலைமாதுவை திருமணம் செய்தான். அதோடு, மது அருந்துவது, மாமிசம் உண்பது, திருடுவது, வேட்டையாடுவது, பிறர் மனைவியரை அனுபவிப்பது போன்ற அணைத்து பாவகாரியங்களிலும் ஈடுபட்டான். ஒரு முறை விருந்திற்கு சென்ற பவஷர்மா மிகவும் அதிகமாக மது அருந்தினான். அதன் விளைவாக வயிற்றுக்கடுப்பால் மிகவும் அவதிப்பட்டான். மிகவும் துன்புற்ற அவன் ஒரு நாள் இறந்து போனான். அட...