Skip to main content

Posts

Showing posts with the label Baladeva Vidyabhushana / ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர்(VAH)

ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர்

  ஸ்ரீ பலதேவ வித்யா பூஷணர் மறைந்த தினம் / 20-6-2021 ஸ்ரீல பலதேவ வித்யா பூஷணர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஒரிசாவில் பிறந்தார். மிகவும் சிறிய வயதிலேயே அவர் இலக்கணம் கவிதைகள் தர்க்கம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்தார். பிறகு தீர்த்த யாத்திரை செல்லும் வழியில், ஸ்ரீ ராதா தாமோதர தேவரை சந்தித்தார். அவர் ஸ்ரீ ரசிகானந்ததேவரின் பரம சிஷ்யர் ஆவார். அவருடன் தத்துவம் பற்றி விளக்கமாக கேட்டறிந்து தனது அறிவை வளர்த்துக் கொண்டார் . ஸ்ரீ ராதா தாமோதரா தேவர். பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கௌடிய வைஷ்ணவக் கொள்கைகளையும், அவரின் எல்லையற்ற கருணையையும் விரிவாக எடுத்துரைத்தார்.மிக குறுகிய காலத்திலேயே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தை, அவரிடம் கற்று, அதில் கைதேர்ந்தவர் ஆனார். கௌடிய வைஷ்ணவ ஆச்சாரியரான விஸ்வநாத சக்கரவர்த்தி தாக்கூரிடம், பகவானின் சக்தியானது, ஒரே சமயத்தில் பகவானுடன் ஒன்றாகவும், வேறாகவும் உள்ளது என்ற ( "அசிந்தியபேதா பேத தத்துவம்") கௌடிய வைஷ்ணவத் தத்துவ உபதேசத்தை பெற்றார். ஒரு நாள் ஜெய்ப்பூர் அரசவையில் ஸ்ரீ ராமானுஜ சம்பிரதாயத்தை சேர்ந்த சிலர், கௌடிய சம்பிரதாயத்தை பற்றி விவாதம் நடத்த ஆரம்பித்தனர். அவர்கள் ...