Skip to main content

Posts

Showing posts with the label Prabhupada Lecture / ஸ்ரீல பிரபுபாதர் உபன்யாசம் (Articles)

மக்கள் கிருஷ்ண உணர்வை ஏற்காதது ஏன்?

  மக்கள் பௌதிக இன்பத்தில் மிகவும் மயங்கியிருக்கும் காரணத்தினால், இது மிகவும் கடினமான செயலாக உள்ளது. நமது கிருஷ்ண உணர்வினைப் புதுப்பிப்பதே மனித வாழ்வின் இறுதிக் குறிக்கோள் என்றபோதிலும், இவர்கள் பொதுவாக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தினை விரும்புவதில்லை. கிருஷ்ணரே கடவுள், இதுவே வேத சாஸ்திரங்களின் வாக்கியம்: க்ருஷ்ணஸ் து பகவான் ஸ்வயம். கடவுளைத் தேடிய பின்னர், கடவுள் யார் என்பதில் மாபெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பின்னர், எல்லா ஆச்சாரியர்களும் கிருஷ்ணரே கடவுள் என்று முடிவு செய்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, கலி யுகத்தின் தற்போதைய தருணத்தில், பெரும்பாலான மக்கள் கடவுள் மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதில்லை. ஏன்? இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் (7.15) குறிப்பிடப்பட்டுள்ளது: நமாம் துஷ்க்ருதினோ மூடா:ப்ரபத்யந்தே நராதமா: மாயயாபஹ்ருத-க்ஞானாஆஸுரம் பாவம் ஆஷ்ரிதா: துஷ்க்ருதின என்னும் சொல்லானது “எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவன்” என்று பொருள்படுகிறது. க்ருதி என்றால் “சிறப்புவாய்ந்த” அல்லது “மிகவும் புத்திசாலியான” என்று பொருள். ஆனால் துஷ்க்ருதி என்றால் “தனது தகுதிகளை பாவச் செயல்களுக்காக உபயோ...

மறுபிறவியின் துன்பத்தை அறிவோம்

வாழ்க்கையின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கடவுளின் சட்டங்களைப் பற்றியும் மக்களுக்கு அறிவினைப் புகட்டுவதற்கு இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் முயற்சி செய்து வருகிறது. நாங்கள் எதையும் புதிதாக தயாரிப்பதில்லை. இவையனைத்தும் வேதங்களில் இருந்து பெறப்படுகின்றன. வேதங்கள் அறிவைப் பெறுவதற்கான நூல்களாகும் (வேதம் என்றால் “அறிவு” என்று பொருள்). நாம் தற்போது பாவச் செயல்களை தொடர்ந்து செய்து வருகிறோம், இவற்றிற்காக மறுபிறவியில் துன்பப்பட நேரிடும். நாம் அனைவரும் நிச்சயம் மரணமடைவோம். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்: ந ஹன்யதே ஹன்யமானே சரீரே, “உடல் மடியும்போது ஆத்மா மடிவதில்லை.” நாஸ்திகர்கள் நினைக்கின்றனர்: “உடல் அழியும்போது, அனைத்தும் முடிந்துவிடுகிறது.” ஆனால் இஃது உண்மையல்ல. நாம் வெறுமனே உடையைப் போன்ற இந்த உடலை மட்டுமே மாற்றுகின்றோம். ஆனால் ஆத்மாக்கள் என்ற முறையில், நான் நித்தியமானவன், நீங்கள் நித்தியமானவர்கள். நம்முடைய கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தினாலேயே நாம் பலதரப்பட்ட உடல்களினுள் நுழைகின்றோம். உதாரணமாக, நான் மனிதனாக என்னுடைய வாழ்வினை மிகவும் அருமையாக அனுபவித்து வருகிறேன். ஆனால் என்னுடைய மறுபிறவியில் ...