Skip to main content

Posts

Showing posts with the label அத்தியாயம் 12

ஶ்ரீமத் பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை

  கீதா மஹாத்மியம் ஶ்ரீமத் பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை பன்னிரண்டாம் அத்தியாயத்தின் மஹிமை *************************** பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 12 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்". தெற்கே, கோலாப்பூர் என்ற தலத்தில், பகவான் விஷ்ணுவின் மனைவியான மஹாலக்ஷிமியின் ஆலயம் உள்ளது. அங்கு அவர் அணைத்து தேவர்களாலும் வழிபடப்படுகிறார். அந்த தலம் அணைத்து ஆசைகளையும் நிறைவேற்றவல்லதாகும். ருத்ரகயாவும் அங்கு அமைந்துள்ளது. ஒரு நாள் ஒரு இளவரசர் அங்கு வந்தார். அவருடைய உடல் பொன்னிறமாகவும், அவருடைய கண்கள் மிக அழகாகவும் இருந்தன. உறுதியான தோள்களும், அகலமான பேழையும் கொண்டிருந்தார் அவர். அவருடைய கரங்கள் உறுதியாகவும் நீளமாகவும் இருந்தன. அவர் கோலாப்பூரை அடைந்ததும் ...