ஸ்ரீ சாரங்க முராரி தாகூர் 🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅 ஸ்ரீ சாரங்க முராரி தாகூர், மோதத்ருமத்வீப மாம்-காச்சி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வழிபட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோபிநாத் விக்கிரஹங்கள் இன்றும் அங்கு உள்ளன.ஸ்ரீ சாரங்க முராரி தாகூரின் குரு , ஸ்ரீ சாரங்கரின் கோவில் முற்றத்தில், மிகவும் பழமையான பகுல் மரம் ஒன்று இருந்தது. இம்மரம் தொடர்பான உள்ளூர் புராணக்கதை ஒன்று உண்டு. ஒருநாள் ஸ்ரீ மஹாப்ரபு அங்கு வந்தபோது, ஸ்ரீ சாரங்கரின் கோவில் முற்றத்தில் உள்ள பகுல் மரம் பட்டுபோய், அழிவதைப் பார்த்தார். மஹாப்ரபு சாரங்கரைப் பார்த்து, 'இம்மரம் பட்டுபோய்யுள்ளது; நீர் என்ன செய்யப்போகிறீர்கள்' எனக் கேட்டார். 'இம்மரத்தைக் காப்பாற்ற, உங்கள் கருணையைத் தவிர எனக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை' என சாரங்க தாகூர் பதில் கூறினார். உடனே மஹாப்ரபு, பட்டுபோன அம்மரத்தைத் தழுவிக்கொண்டார். மரம் இன்றளவும் பெரிதாகவும், உறுதியாகவும் உள்ளது. சாரங்க தாகூரா சீடர்களை ஏற்பதில்லை என உறுதியாக இருந்தார். ஆனால் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபு, அவரிடம் சீடர்களை ஏற்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.. இறுதி...