Skip to main content

Posts

Showing posts with the label Vraja Darshanam / ஶ்ரீ விரஜ தரிசனம் / (Story)

ஸ்ரீ கோவிந்த தேவரின் தோற்றம்

  ஸ்ரீ கோவிந்த தேவரின் தோற்றம் சைதன்ய மஹாப்ரபுவிடமோ அல்லது அவரது சீடர்களிடமோ நம்பிக்கை கொண்டவர்களுக்கு விருந்தாவனத்தின் அழகிய லீலைகளை வெளிப்படுத்தவேண்டும் என்பது மஹாபிரபுவின் விருப்பமாகும். அவருடைய தாயான சச்சி மாதாவின் வேண்டுகோள்படி மஹாபிரபு பூரியில் இருந்த சமயம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது லீலைகள் நடத்திய திவ்யமான ஸ்தலங்களை கண்டறிந்து புதுப்பிக்க வேண்டிய பணியை ஸ்ரீ ரூப கோஸ்வாமி மற்றும் சனாதன கோஸ்வாமியிடம் ஒப்படைத்தார். மஹாபிரபுவின் விருப்பப்படி பகவான் கிருஷ்ணர் லீலைகள் செய்த பெரும்பாலான இடங்களை ஸ்ரீல ரூப கோஸ்வாமி கண்டறிந்தார். இருப்பினும் அவர் திருப்தி அடையவில்லை. ஏனெனில் ஸ்ரீ கோவிந்த தேவரின் விக்ரஹம், விருந்தாவனத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் ஸ்ரீ ரூப கோஸ்வாமியால் கோவிந்த தேவரை கண்டறிய முடியவில்லை. அவரும் விருந்தாவனத்தின் மூலை முடுக்கிலெல்லாம் தேடிபார்த்துவிட்டார்; பல புத்தகங்களை புரட்டிப்பார்த்துவிட்டார்; வ்ரஜவாசிகளின் இல்லங்களில் கூட தேடிவிட்டார்; ஆனால் கோவிந்த தேவரை கண்டறிய முடியவில்லை. மஹாபிரபுவின் ஆசையை நிறைவேற்றமுடியாததால் மிகவும் வருத்தமடைந்தார் ஸ்ரீ ர...

ஸ்ரீ மதனமோஹனனின் வரலாறு

  ஸ்ரீ மதனமோஹனனின் வரலாறு அருளியவர் :- தவத்திரு ராதாநாத் சுவாமி மஹராஜ் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகைவிட்டுச் சென்றபின், மகாராஜா யுதிஷ்டிரர், பகவானுடைய பிரிவைத் தாங்க முடியாமல், தானும் இவ்வுலகைவிட்டுச் செல்லத் தீர்மானித்தார். அவர் செல்லும்முன், மகாராஜா பரீக்ஷித்தை இந்த உலகுக்கே மன்னனாக முடிசூட்டி, பகவான் கிருஷ்ணருடைய கொள்ளுப் பேரன் வஜ்ரநாபரை, மதுராவின் மன்னனாக முடி சூட்டினார். விருந்தாவனத்தின் மகிமைகளை மீண்டும் நிலைநிறுத்துமாறு, தூய பக்தர்கள் வஜ்ரநாபரிடம் வேண்டினர். பகவான் கிருஷ்ணரின் லீலைகள் நிகழ்ந்த விருந்தாவனத்தின் புனித இடங்களை அகழ்வாராய்ச்சி மூலம் கண்டுபிடித்து, முக்கிய இடங்களில், பகவானின் புனிதமான அழகிய திருவுருவை, அர்சா விக்ரகமாக நிறுவ, வஜ்ரநாபர் முடிவுசெய்தார். பின், யமுனை நதிக்கரையில் உள்ள ஒரு கல்பதருவின் (கற்பகவிருக்ஷம் மரத்தின் ) கீழ் அமர்ந்து, ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரை தியானித்தார். கல்பதருவின் தெய்வீக அருளால், ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணரின் கருணை, அவர் உள்ளத்தில் புகுந்து, ஸ்ரீ கிருஷ்ண லீலை நடந்த இடங்களை அவருக்குத் தெரிவித்தது. பின்னர், பகவானின் அர்சா விக்ரகத்தை நிறுவ, தேவர்...