கீதா மஹாத்மியம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் ஶ்ரீமத் பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயத்தின் மஹிமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 5 பற்றிய வர்ணனை பகவான் விஷ்ணு கூறினார், "எனதன்பு லட்சுமியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் ஐந்தாம் அத்தியாயத்தின் அளவிட முடியாத வர்ணனைகளை கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக". மதரா என்னும் மாவட்டத்தில் புரு குட்சப்பூர் என்னும் ஊர் உள்ளது. அங்கு பிங்களா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். அவருடைய குழந்தை பருவத்திலிருந்தே அவருக்கு வேதங்களும் பல பிராமண பண்புகளும் கற்றுத்தரப்பட்டன. ஆனால் அதில் சிறிதும் ஆர்வம் காட்டாத அவர், இளமை பருவத்தை அடைந்ததும் பிராமண கலாச்சாரத்தை முழுவதுமாக உதறித்தள்ளிவிட்டு, இசை கருவிகள் வாசிப்பது, பாடுவது மாற்றும் நடனம் ஆடுவது போன்றவற்றை கற்க து...