Skip to main content

Posts

Showing posts with the label Srimad Bhagavatam Story / ஶ்ரீமத் பாகவத கதைகள்(Story )

பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்

  பரமபுருஷராகிய நரசிம்மதேவர் எப்படி பிரகலாத மகாராஜனை மகிழ்வித்த பின் மறைந்தருளினார் என்பதைப் பற்றியும், சிவபெருமானால் அருளப்பட்ட ஒரு வரத்தைப் பற்றியும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பகவான் நரசிம்மதேவர் ஒன்றன்பின் ஒன்றாக பிரகலராத மகாராஜனுக்கு வரங்களை அருள விரும்பினார். ஆனால் அவற்றை ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடைகளாக எண்ணிய பிரகலாதர் அவற்றில் ஒன்றைக்கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அவர் பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதியடைந்து, “பகவானுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள ஒருவன் சொந்த புலன் நுகர்வுக்காக பகவானிடம் பிரார்த்திப்பானாயின், அவனைத் தூய பக்தன் என்று அல்லது பக்தன் என்றுகூட அழைக்க முடியாது. கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ள ஒரு வியாபாரியாகவே அவன் அழைக்கப்படுவான். அது போலவே, தன் சேவகனிடமிருந்து சேவையைப் பெற்றுக்கொண்ட பின் அவனை திருப்திப்படுத்த விரும்பும் எஜமானரும் உண்மையான எஜமானரல்ல” என்று கூறினார். எனவே பிரகலாதர் பகவானிடமிருந்து எதையும் யாசிக்கவில்லை. மாறாக, பகவான் தனக்கு வரமருள விரும்பினால், பௌதிக வரங்களுக்கு தான் மயங்கிவிடாத...

சிவபெருமான் சாந்தமடைதல்

  ஸ்ரீமத் பாகவதம் -  நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம் 6-7 - சுருக்கம் பிரம்மதேவரின்   அறிவுரை ருத்ர கணங்களால் தாக்கப்பட்ட புரோகிதர்களும் தேவர்களும் மிகுந்த பயத்துடன் பிரம்மதேவரிடம் சென்று முறையிட , பிரம்மதேவர் பதிலளித்தார் , சிவபெருமானுக்கு வேள்வியின் அவிர்பாகத்தை வழங்காமல் பெறும் தவறை இழைத்துவிட்டீர்கள் . இருப்பினும் , அவர் எளிதில் திருப்தியுறும் தன்மை கொண்டவர் என்பதால் , அவரது திருவடிகளைப் பற்றி மன்னிப்பு கோருங்கள் . தக்ஷனுடைய சொல் அம்புகளால் புண்பட்ட அவர் தற்போது தமது மனைவியையும் இழந்துள்ளார் . ஆகவே , அவர் கோபம் கொண்டால் அனைத்து உலகங்களும் அழிவுறுவது திண்ணம் . உங்களது யாகம் சரிவர நிறைவேற வேண்டுமெனில் , அவரிடம் சென்று மன்னிப்பை யாசியுங்கள் . ” இவ்வாறு தேவர்களுக்குக் கட்டளையிட்ட பிரம்மதேவர் , அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு கைலாசத்தை நோக்கிப் புறப்பட்டார் . கைலாசத்தின்   வர்ணணை கைலாச மலையானது தேவர்கள் , கின்னரர்கள் , கந்தர்வர்கள் , அப்சரப் பெண்கள் முதலியோரால் நிறைந்திருந்தது ; பலவித மரங்கள் , செடி - கொடி...