தேவர்களின் பிரார்த்தனையும் கிருஷ்ணாவதாரமும் ( ஆதாரம் - கர்க சம்ஹிதை ) 🔆🔆🔆🔆🔆 முன்பு ஒரு சமயம் மிதிலாபுரியில் பஹுலாஸ்வன் (ஜனகர்) என்னும் பெயரில் பிரசித்தி பெற்ற ஒரு வீர மன்னன் அரசாண்டு வந்தான். அவர் ஸ்ரீ கிருஷ்ண பகவானின் பரம பக்தரும், அமைதியான மனதுடையவரும் ஆணவமற்றவரும் ஆவார். ஒருமுறை நாரத முனிவர் ஆகாய வழியே வந்து இவரது வீட்டில் இறங்கினார். அவர் வந்ததைக் கண்ட மன்னன் இருக்கையில் அமரச் செய்து, நன்கு பூஜை செய்த பின் இரு கைகளையும் கூப்பி அவரிடம் கேட்டார். முனிவரே, சாதுக்களைக் காப்பதற்காக பகவான் விஷ்ணுவின் அவதாரங்கள் எத்தனை வகையானவை? இதை எனக்கு கூறியருள வேண்டும். ஸ்ரீ நாரதர் கூறினார்: வியாசர் முதலான முனிவர்கள், அம்சாம்சம், அம்சம், கலை, பூரணம், பரிபூரணதமம் என்னும் ஆறுவகையான அவதாரங்களைக் கூறியுள்ளனர். இவற்றில் ஆறாவது பரிபூரணதமம் அவதாரம் சாக்ஷாத் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். பகவானுடைய அவதாரத்தை, சிறந்த வித்வான்கள் சாக்ஷாத் பரிபூர்ணதமம் என்று கூறுகிறார்கள். எந்த அவதாரத்தில் பூரணத்தின் முழு லக்ஷணங்களும் தென்படுகிறதோ, மனிதன் தன் தனித்தனி பாவனைக்கேற்ப தனக்கு மிகவும் பிரியமான உருவத்த...