Skip to main content

Posts

Showing posts with the label Purana stories / புராண கதைகள் ( Story)

நாரதர் கண்ட கிருஷ்ணரின் மாயை: ஒரு விழிப்புணர்வுப் பயணம்

ஆன்மீகப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொரு சாதகனுக்கும் எழும் மிகப்பெரிய கேள்வி 'மாயை' என்றால் என்ன என்பதுதான். கண்ணுக்குத் தெரிந்து நம்மைக் கட்டிப்போடும் இந்த உலகம் உண்மையா அல்லது இது இறைவனின் விளையாட்டா? அறிவுக்கடலான நாரத முனிவருக்கே இந்த சந்தேகம் வந்தபோது, ஜகந்நாதனாகிய கிருஷ்ணர் அவருக்கு ஒரு நேரடிப் பாடத்தைக் கற்பித்தார். காலம், உறவு, பந்தம் என அனைத்தும் ஒரு கணத்தில் தோன்றி மறையும் தன்மையுடையது என்பதை உணர்த்தும் நாரதரின் அந்தப் பரவசமான அனுபவத்தைப் பின்வரும் பிரம்ம வைவர்த்த புராணம் கதை விரிவாக விளக்குகிறது. நாரதரின் விருப்பம் பகவானின் மாயை என்பது வெறும் ‘சூனியம்’ அல்ல; அது அவரது அசிந்திய சக்தியின் ஒரு அங்கமாகும். நாரத முனிவரின் வாழ்வில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வு, இந்த மாயையின் வலிமையையும், அதிலிருந்து விடுபட ‘சரணாகதி’ ஒன்றே வழி என்பதையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. ஒருமுறை தேவர்ஷி நாரதர், தேவாதி தேவனான ஜகந்நாதன் கிருஷ்ணரை வணங்கி, "மாதவா! உமது மாயையை நான் காண விழைகிறேன். எதனால் இந்த அகிலமே மயங்குகிறதோ, அந்த மகா மாயையை எனக்குக் காண்பியுங்கள்" என்று வேண்டினார். அதற்குப் ப...

பக்தியால் முக்தி பெற்ற மான் : ஒரு தெய்வீகக் கதை

  பக்தியால் முக்தி பெற்ற மான்: ஒரு தெய்வீகக் கதை 🌟 ஒரு காலத்தில், புன்ய நதிக்கரை அருகே, தெய்வீகமான வனமொன்று அமைந்திருந்தது. அங்கே, மிகவும் சாந்த குணமுடைய ஒரு மான் வாழ்ந்து வந்தது. இந்த மான் மற்ற சாதாரண மான்களைப் போல இல்லாமல், அருகிலிருந்த முனிவர்களின் ஆசிரமத்தின் ஆன்மீகச் சூழலால் வெகுவாக ஈர்க்கப்பட்டிருந்தது. பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் மீது பக்தி தினமும் அதிகாலையில், முனிவர்கள் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின் திருநாமங்களையும் வேத மந்திரங்களையும் ஓதுவதை மான் மிகுந்த கவனத்துடன் கேட்கும். அந்தத் தெய்வீக ஒலிகளின் பலனாக நாளடைவில் விஷ்ணுவின் நாமத்தின் மீது மாபெரும் ஈர்ப்பு ஈர்ப்பு  ஏற்பட்டது, அது மெல்ல மெல்ல வளர்ந்தது. பகவான் ஶ்ரீமன் நாராயணனின் ரூபங்களும் லீலைகளும் அதன் மனதிற்குள் ஆழமாகப் பதிந்தன. மானின் அமைதியான மற்றும் சாந்தமான நடத்தையைக் கண்ட முனிவர்கள், அதனை அங்கேயே, பாதுகாப்பாக இருக்க அனுமதித்தனர். அருகில் இருந்த ஆலயத்தின் மணியோசை கேட்கும் போதும், தீபாராதனை காட்டப்படும் போதும், அந்த மான் மிகுந்த மரியாதையுடன் தலை வணங்கியது. அது மற்ற விலங்குகளைப் போல் பிரசாதத்திற்காக ஒருபோதும் ஆவலுடன் நிற்கவ...

பூனையும், எலியும் – நட்பும், பகையும்!

தருமர் பீஷ்மரை நோக்கி..'நண்பர், பகைவரிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்?' எனக் கேட்க பீஷ்மர் உரைக்கிறார் தருமா..ஆபத்துக் காலத்தில் எப்படி தப்பிப்பது என சொல்கிறேன் கேள். பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான்.அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம்.மக்களிடம் பகை,நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை.இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியவை,செய்ய வேண்டாதவை ஆகியவற்றைப் புரிந்துக் கொண்டு நம்பவும் வேண்டும்..நம்பாது இருக்கவும் வேண்டும்.நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும்.உயிரைப் பாதுகாத்துக் கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்துக் கொள்ளவும் வேண்டும்.எந்தச் சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன்.மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான்.காரியத்தின் பயனைப் புரிந்துக் கொண்டு பகைவனிடம் நட்பாகலாம்.நண்பனிடம் பகை கொள்ளலாம்.இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்.. ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது.அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன.அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வலையில் ...

அரசன் யக்ஞத்துவஜா

யக்ஞத்துவஜா என்ற அரசன், தான் வாழ்ந்த காலத்தில் பல இடங்களில் விஷ்ணு கோயில் கட்டினான். ரேவா நதிக் கரையிலும் ஒரு கோயில் கட்டினான். அவன் கட்டிய எல்லாக் கோயில்களிலும், கோயிலைச் சுத்தம் செய்யும் பணியும், இரவில் விளக்கேற்றும் பணியும் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்பதற்காகப் பெருமுயற்சி செய்தான்.  விதஹோத்ரா என்பவர் அந்த கோவில்  புரோகிதராக இருந்தார் அவர் யக்ஞத்துவஜாவிடம், “அரசே! விஷ்ணு கைங்கர்யம் என்பதைப் பல வழிகளில் செய்யலாம். அவற்றை எல்லாம் விட்டுவிட்டுக் திருக்கோயிலைத் தூய்மை செய்தல், விளக்கேற்றுதல் ஆகிய இரு காரியங்களுக்காக மட்டும் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டுமா? அது ஏன் என்பது எனக்குப் புரியவில்லை?” என்று கேட்டான். இதைக் கேட்ட யக்ஞத்துவஜா அந்த புரோகிதரை நோக்கிச் பதில் உரைக்க ஆரம்பித்தார்.. "விதஹோத்ரரே ! எனக்கு ஜதீஸ்மரா என்ற முற்பிறப்பை உணரும் ஆற்றல் உண்டு. அதனால்தான் இவ்வாறு செய்கிறேன். சத்திய யுகத்தில் ரைவதா என்ற ஒரு பிராமணன் இருந்தான். வேத சாஸ்திரங்கள்  அனைத்தும் கற்று தேர்தவராக விளங்கினர். ஆனால் அவர் கற்றதை அவனது வாழ்கையில் செயல்படுத்தியதே இல்லை . எத்தனை குற்றங்கள் புரிய முடிய...

ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை

  ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை ஆதாரம் :- கர்க ஸம்ஹிதை / வ்ருந்தாவன கண்டம் /  அத்தியாயம் 16 / துளசி பூஜை /  துளசியின் மஹாத்மியம்,     🔆🔆🔆🔆🔆🔆🔆 பஹூலாஸ்வ மன்னர்,  நாரத மகரிஷியிடம் ஶ்ரீமதி ராதா ராணி , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்கா துளசி தேவிக்கு சேவை செய்து வரம் பெற்ற நிகழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஶ்ரீ நாரத மகரிஷி மன்னரின் கேள்விகளால் மனமகிழ்ந்து பின்வருமாறு கூறினார். ஒரு முறை ராஸேஸ்வரி ஶ்ரீமதி ராதா ராணி தர்ம மறிந்தவர்களில் சிறந்தவரான சந்திரானனா எனும் தோழியிடம் . '  'ஸ்ரீ கிருஷ்ணனை மகிழ்விப்பதற்காக பரம சௌபாக்யத்தை அதிகரிக்கச் செய்வதும் புண்ணியமளிப்பதும் மனம் விரும்பும் பொருளை அளிக்க வல்லதுமான தேவதையின் பூஜையைப் பற்றிக் கூறு.' என்று கேட்டார். ஸ்ரீ ராதாவின் பேச்சைக் கேட்டு தோழிகளில் சிறந்தவளான சந்திரானனா தன் இதயத்துள் ஒருகணம் யோசித்து பின் பின்வருமாறு பதில் கூறினாள். 'ராதே! சிறந்த மற்றும் சௌபாக்யமளிப்பதும், மிகுந்த புண்ணியத்தைத் தருவதும் ஸ்ரீ கிருஷ்ணனையே அளிக்கக்கூடிய வரம் தருவதுமான விரதம் - துளசிக்கு சேவை செ...