துளசி தேவியின் தோற்றம் தருமத்வஜன் என்கிற அரசனுக்கும் அவரது மனைவி மாதவிக்கும் கார்த்திகை மாதம் பௌர்ணமியும், சுக்ரவாரமும் கூடிய சுபதினத்தில் லக்ஷ்மிதேவியின் அம்சமாக துளசி தேவி அவதரித்தார். பருவ வயது வந்தவுடன் துளசி தேவி பதரிகாச்ரமம் சென்று பகவான் ஸ்ரீமந் நாராயணரையே நாயகனாக அடைய வேண்டுமென்று பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரியலானார். பிரம்மதேவர் அவர் முன் தோன்றி,"துளசி நீ விரைவில் சங்கசூடனை மணப்பாய்" என்று வரமருள, அதற்கு துளசி, "நான் தங்களிடம் நாராயணனை அடைய வேண்டுமென்றுதான் தவமிருந்தேன் ஆனால்..." என்றதும், பிரம்மா "நீ முன் ஜென்மத்தில் பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை மோகித்ததால் ஸ்ரீமதி ராதாராணி உன் மீது கோபம் கொண்டு உன்னை பூவுலகில் மானிட யோனியில் பிறக்குமாறு சபித்திருக்கிறாள். அதனால்தான் நீ இங்கு பிறந்திருக்கிறாய். கிருஷ்ணரின் அருளால் விரைவில் அவரையே பதியாக அடைவாய். ஆனால் அதற்கு முன்பு, முற்பிறவியில் கிருஷ்ணரின் அங்கத்தில் தோன்றிய சுதர்மாவும், கிருஷ்ணருக்காக ஸ்ரீமதி ராதாராணியிடம் ராக்ஷஸத்தனமாக வாதாடியதால் ராதாராணியின் சாபத்திற்குள்ளாகி சங்கசூடன் என்னும் ராக்ஷஸனாக பூமியில் ப...