ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 6 / அத்தியாயம் 16 / பதம் 34-48 ************************************************************************* பதம் 34 சித்ரகேதுர் உவாச அஜித ஜித : ஸம - மதிபி : ஸாதுபிர் பவான் ஜதாத்மபிர் பவதா விஜிதாஸ் தே ‘ பி ச பஜதாம் அகாமாத்மனாம் ய ஆத்மதோ ‘ தி - கருண : மொழிபெயர்ப்பு சித்ரகேது கூறினார் : வெல்லுதற்கரிய பகவானே , உங்களை யாராலும் வெல்ல முடியாது என்றபோதிலும் , தங்கள் புலன்களையும் மனதையும் அடக்கிய பக்தர்களால் நீங்கள் வெற்றி கொள்ளப்படுகிறீர்கள் என்பதில் ஐயமில்லை . உங்களிடமிருந்து எந்த பௌதிக ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காத பக்தர்களிடம் நீங்கள் காரணமற்ற கருணை காட்டுகிறீர் என்பதால் , அவர்களால் உங்களைத் தங்களது கட்டுபாட்டில் வைத்திருக்க முடிகிறது . உண்மையில் நீங்கள் உங்களையே அவர்களுக்குக் கொடுத்து விடுகிறீர்கள் . இதனால் உங்களுக்கும் உங்களுடைய பக்தர்களிடம் முழு ஆதிக்கம் உள்ளது . பதம் 35 தச விபவ : கலு பகவன் ஜகத் - உதய - ஸ்திதி - லயாதீனி விஸ்வ - ஸ்ருஜஸ் தே ‘ ம்சாம்சாஸ் தத்ர ம்ருஷா ஸ்பர்தந்தி ப்ருதக் ...