கீதா மஹாத்மியம் ஶ்ரீமத் பகவத் கீதை பதினோராம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை பதினோராம் அத்தியாயத்தின் மஹிமை *************************** பத்ம புராணத்திலிருந்து - பகவத் கீதை அத்தியாயம் 11 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினொன்றாம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். இதன் அணைத்து மகைமைகளையும் கூற இயலாது. ஏனெனில் ஆயிரக்கணக்கான கதைகள் இதற்கு உதாரணம். ஆகையால் நான் ஒரே ஒரு கதையை மட்டும் கூறுகிறேன். ப்ரணிதா நதிக்கரையிலுள்ள மேகங்காரா என்னும் ஊரில் ஜெகதீஸ்வரர் கோவில் உள்ளது. அங்குள்ள ஜெகதீஸ்வரர் கரத்தில் வில்லேந்தியபடி காட்சியளிப்பார். அந்த ஊரில் சுனந்தர் என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். மிகவும் தூய்மையான அவர், தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரிய விரதம் மேற்கொண்டவராவார். சுனந்தர் தினமும் ஜெகதீஸ்வரர் முன்னால் அமர்ந்து ஸ்ரீமத் பகவத் கீதையி...