Skip to main content

""ஸ்ரீமதி ராதாராணியின் முக்கியமான இருபத்தைந்து தெய்வீக குணங்கள்



 அத, வ்ருந்தா, வனேஷ்வர்யா: கீர்த்யந்தே ப்ரவரா குணா

மது ரேயம் நவ - வயாஷ் சலாபாங்கோஜ்ஜ்வல-ஸ்மிதா

சாரு-ஸௌபாக்ய-ரேகாட்டியா கந்தோன்மாதி,த-மாதவா

 

ஸங்கீத- ப்ரஸராபிஜ்ஞா ரம்ய-வாங் நர்ம- பண்டி,தா

வினீதா கருணா - பூர்ணா விதக்தா, பாடவான்விதா

 

லஜ்ஜா - ஷீலா ஸு-மர்யாதா தைர்ய-காம்பீர்ய-ஷாலினீ

ஸு- விலாஸா மஹாபாவ- பரமோத்கர்ஷ- தர்ஷிணீ

 

கோகுல-ப்ரேம - வஸதிர் ஜகச்-ச்ரேணீ- லஸத்- யஷா:

குர்வ் -அர்பித-குரு-ஸ்நேஹா ஸகீ,-ப்ரணயிதா- வஷா

 

க்ருஷ்ண- ப்ரியாவலீ- முக்யா ஸந்ததாஷ்ரவ- கேஷவா

பஹுனா கிம் குணாஸ் தஸ்யா: ஸங்க்யாதீதா ஹரேர் இவ


(1) மதுரா - மிகவும் இனிமையானவள்

(2) நவ-வயா - என்றும் இளமையானவள்,

(3) சல-அபாங்கா - சஞ்சலமான கண்களைக் கொண்டவள்

(4) உஜ்ஜ்வல-ஸ்மிதா - பிரகாசமாகச் சிரிப்பவள்

(5) சாரு -ஸௌபாக்ய-ரேக-ஆட்யா - மிகவும் அழகான மங்கல ரேகைகளை உடையவள்

(6) கந்த உன்மாதி -மாதவா - தனது திருமேனியின் நறுமணத்தினால் கிருஷ்ணரை மகிழ்விப்பவள்

(7) ஸங்கீத ப்ரஸர - அபிஜ்ஞா - சங்கீதத்தை விரிவாக அறிந்தவள்

(8) ரம்ய-வாக் - ரம்மியமாகப் பேசுபவள்

(9) நர்ம-பண்டிதா இனிமையாகப் பேசி நகைச்சுவை புரிவதில் திறமையானவள்

(10) வினீதா - மிகுந்த பணிவும் அடக்கமும் உடையவள்

(11) கருணா பூர்ணா - கருணை நிறைந்தவள்

(12) விதக்தா - சாமர்த்தியமானவள்

(13) பாடவான்விதா - தனது கடமைகளை நிறைவேற்றுவதில் திறமைசாலி

(14) லஜ்ஜா – ஷீலா - வெட்கமுடையவள்

(15) ஸு-மர்யாதா - மரியாதைக்குரியவள்

(16) தைர்ய - அமைதியானவள்

(17) காம்பீர்ய-ஷாலினீ - கம்பீரமானவள்

(18) ஸு- விலாஸா - வாழ்வை அனுபவிப்பதில் திறமைசாலி

(19) மஹாபாவ - பிரேமையின் மிகவுயர்ந்த நிலையில் அமையப் பெற்றவள்

(20) பரமோத்கர்ஷ- தர்ஷிணீ கோகுல-ப்ரேம  - கோகுல பிரேமையின் இருப்பிடம்

(21) ஜகச்-ச்ரேணீ- யஷா பணிவான பக்தர்களில் மிகவும் பிரபலமானவள்

(22) குரு-ஸ்நேஹா - பெரியவர்களிடம் பெரிதும் பாசம் கொண்டவள்

(23) ஸகீ,-ப்ரணயிதா- வஷா  - தனது ஸகிகளின் அன்பிற்கு வசப்பட்டவள்

(24) க்ருஷ்ண- ப்ரியாவலீ- முக்யா  - கிருஷ்ணருக்கு பிரியமானவர்களில் முதன்மையானவள் (கோபியர்களில் முதன்மையானவள்)

(25) ஆஷ்ரவ-கேஷவா - கிருஷ்ணரை எப்போதும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவள்.

 சுருக்கமாகக் கூறினால், அவள் பகவான் கிருஷ்ணரைப் போலவே எண்ணற்ற தெய்வீக குணங்களை உடையவள்.


உஜ்ஜ்வல-நீலமணி (ஸ்ரீ-ராதா - ப்ரகரண 11-15)


ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 23.86



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...